For Daily Alerts
Just In
நிதி ஆயோக் கூட்டத்திற்கு முழுக்கு போட்ட மமதா பானர்ஜி – ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பு
டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தினை ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளார் மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி.
திட்டக்கமிஷனுக்கு மாற்றாக மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள நிதி ஆயோக் அமைப்பின் முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது.
இதில் பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். ஆனால் மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். அவர் சார்பில் பிரதிநிதியும் கலந்துகொள்ளவில்லை.
கூட்டம் முடிந்த பின் நிருபர்களிடம் பேசிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்காளத்தில் இருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.
delhi mamata banerjee minister niti aayog டெல்லி மமதா பானர்ஜி புறக்கணிப்பு மேற்கு வங்காளம் முதல்வர் நிதி ஆயோக் கூட்டம்
English summary
West Bengal Chief Minister Mamata Banerjee was today conspicuous by her absence at the first governing council meeting of NITI Aayog.
Story first published: Monday, February 9, 2015, 8:47 [IST]