மேற்கு வங்க மாநிலத்தில் லாக்டவுன் ஜூன் 30 வரை நீட்டிப்பு: முதல்வர் மம்தா அறிவிப்பு
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் லாக்வுடன் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவது அதிகரித்த காரணத்தால் மிசோரம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் முழுமையான லாட்வுனை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளன.
இந்தியா முழுவதும் மால்கள் மற்றும் உணவகங்கள் மீண்டும் இன்று திறக்கப்பட்ட நிலையில், மேற்கு வங்கம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்கள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை திடீரென அதிகரித்ததை அடுத்து, இரண்டு வாரம் முழு லாக்டவுனை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளன.. கட்டுப்பாடுகள் இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
மிசோரம் மாநில அரசு வெளியிட்ட டுவிட் பதிவில், "முதல்வரின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நடைமுறையில் உள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு 2020 ஜூன் 9 ஆம் தேதி 00:00 மணிநேரத்தில் இருந்து 2 வாரங்கள் மொத்தமாக மாநிலத்தை லாக்டவுன் செய்ய முடிவு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. லாக்டவுன வழிகாட்டுதல்கள் விரைவில் அறிவிக்கப்படும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது 14 நாட்களாக இருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை உடனடியாக அமல்படுத்த மிசோரம் அரசு முடிவு செய்துள்ளது. திங்களன்று மேலும் எட்டு பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் மொத்தம் 42 நோயாளிகளுக்கு மிசோரமில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனையில் மதுரை 30ஆவது இடம்.. கலெக்டரை சந்தித்த வெங்கடேசன் எம்பி... பரபர பேட்டி
Recommended Video
இதனிடையே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திங்களன்று மேற்கு வங்கத்தில் லாக்டவுன் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளார் தற்போதுள்ள அனைத்து தளர்வுகளும் நிபந்தனைகளும் நீடிக்கும்.. முன்னதாக, திருமணம் அல்லது இறுதி சடங்கு போன்ற சமூக நிகழ்ச்சிகளில் 10 பேரை மட்டுமே நாங்கள் அனுமதித்தோம், இப்போது அதை 25 ஆக உயர்த்தியுள்ளோம் "என்று மாநில அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு மேற்கு வங்க முதல்வர் மம்தா ப்னர்ஜி கூறினார்.