For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பட்ஜெட்டில் எந்த துறைக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும்.. மக்களிடம் கருத்து கேட்கிறது நிதியமைச்சகம்

பட்ஜெட் குறித்து பொது மக்களிடம் மத்திய நிதியமைச்சகலம் கருத்துக் கேட்கப்பட்டு வருகிறது

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: பட்ஜெட்டில் எந்த துறைக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்களிடம் மத்திய நிதியமைச்சகம் கருத்து கேட்டு வருகிறது.

மத்திய அரசின் பொது பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் குறித்து மத்திய நிதியமைச்சகம் பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டு வருகிறது.

What It Should Focus On In Budget 2017 - finance minstery

பொது பட்ஜெட்டில் எந்தத் துறைக்கு அதிக அளவில் கவனம் செலுத்த வேண்டும். எந்தத் துறைக்கு எந்த அளவு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விவரங்களைப் பொதுமக்களிடம் மத்திய நிதியமைச்சம் கேட்டு வருகிறது.

மத்திய அரசின் Ministry of Finance என்ற டுவிட்டர் பக்கத்தில், பொது மக்கள் தங்களுடையக் கருத்துகளைப் பதிவு செய்யுமாறு மத்திய நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

விவசாயம், உற்பத்தி, நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் என 4 துறைகளை கொடுத்து அவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களுடையக் கருத்துகளை வரும் 6 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

English summary
The Finance Ministry has Asks to people about What It Should Focus On In Budget 2017
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X