இத்தனை மாற்றங்கள் நிகழுமா ? காஷ்மீரை இரண்டாக பிரித்த மத்திய அரசு.. இனி இதுதான் நடக்கும்!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளதால் அங்கு நிறைய அதிரடி மாற்றங்கள் நடக்க உள்ளது.
Recommended Video
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளதால் அங்கு நிறைய அதிரடி மாற்றங்கள் நடக்க உள்ளது.
மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இராண்டாக பிரிப்பதாக அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்யசபாவில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் இருக்கும். அதேபோல் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் பின் வரும் மாற்றங்கள் நடக்கும்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து.. குடியரசு தலைவர் ஒப்புதல்
1. பிரிவினைவாத குழுக்கள் இடையே பெரும் பிளவு ஏற்படும்.
2. தீவிரவாத இயக்கங்கள் எங்கு செயல்படுவது என்று குழம்பும் நிலை ஏற்படும்.
3. பிரிவினைவாதிகள் சிலர் ஜம்முவிற்காக போராடுவார்கள், சிலர் காஷ்மீருக்காக போராடுவார்கள், இன்னும் சிலர் லடாக்கிற்கு உரிமை கோருவார்கள்.
4. மத்திய அரசு காஷ்மீரில் மட்டும் படைகளை குவிக்க எளிதாக இருக்கும்.
5. சீனா, பாகிஸ்தான் எங்கு ஆக்கிரமிப்பு செய்வது, எந்த பகுதி மீது கவனம் செலுத்துவது என்று தெரியாமல் திணறும்.
6. லடாக்கில் சீனாவின் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தவும் இது உதவியாக இருக்கும்
7. லடாக்கில் உள்ள படைகளை மொத்தமாக காஷ்மீருக்கு மட்டும் அனுப்பி, அதை எளிதாக கட்டுப்படுத்த முடியும்.
8. ராணுவம் கூடுதல் பலம் அடையும்.
9.தேர்தலில் பாஜகவிற்கு அனுகூலமான நிலை ஏற்படும். மாநிலம் பிரிக்கப்படுவதால் இதனால் காஷ்மீரின் அனைத்து வலுவான மாநில கட்சிகளும் மொத்தமாக வலிமை இழக்கும் என்றும் கூறுகிறார்கள்.
10. மாநில கட்சிகள் இங்கு வலிமை இழக்கும் காரணத்தால் எதிர்காலத்தில் அங்கு பாஜக தனிப்பெரும் கட்சியாக மாற வாய்ப்புள்ளது.
11. நிர்வாக ரீதியாகவும் இரண்டு பகுதிகளை எளிதாக நிர்வகிக்க முடியும், ஆகிய பலன்கள் காஷ்மீரை இரண்டாக பிரிப்பதன் மூலம் ஏற்படும் என்கிறார்கள்.