For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இளவரசர் சார்லஸ் பர்த்டேவுக்கு என்ன பரிசு கொடுப்பது என்று தெரியலையே: குழம்பும் உம்மன் சாண்டி

By Siva
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: இந்தியா வந்திருக்கும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தற்போது கேரளாவில் உள்ளார். இந்நிலையில் நாளை பிறந்தநாள் கொண்டாடவிருக்கும் அவருக்கு என்ன பரிசு அளிப்பது என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி குழம்பிக் கொண்டிருக்கிறாராம்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தனது மனைவி கமிலா பார்க்கர் பவ்ல்ஸுடன் 9 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர்கள் 4 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 11ம் தேதி கேரளா சென்றனர். சார்லஸ் கேரளா வந்துள்ளது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் அவர் தனது 65வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார்.

What will Prince Charles get as birthday gift from Kerala CM?

இந்நிலையில் சார்லஸுக்கு பிறந்தநாள் பரிசாக எதை கொடுப்பது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறாராம் கேரள முதல்வர் உம்மன் சாண்டி. சாண்டி தனது குடும்பத்தாருடன் சேர்ந்து சார்லஸை நாளை காலை சந்திக்கவிருக்கிறார். சாண்டி வளர்ந்த ஊரான குமரகோமில் தான் இளவரசர் சார்லஸ் தங்கியுள்ளார்.

இளவரசருக்கு அளிக்கும் பரிசு அவர் பொக்கிஷமாக பார்த்துக் கொள்ளும்படி இருக்க வேண்டும் என்று சாண்டிக்கு சிலர் அறிவுரை கூறியுள்ளனர்.

சாண்டியை சந்தித்த பிறகு இளவரசர் தனது மனைவியுடன் கொச்சியில் இருந்து கொழும்பு செல்கிறார்.

English summary
Britain's Prince Charles, who is in India along with his wife Duchess of Cornwall Camilla Parker Bowles, will celebrate his 65th birthday on Thursday in the 'God's own country'. Kerala Chief Minister Oommen Chandy is now struggling to select a birthday gift for Prince Charles.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X