For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாட்ஸ்அப்பில் குழந்தைகள் பாலியல் குழு.. அட்மினை அதிரடியாக கைது செய்தது சிபிஐ

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: குழந்தைகள் அடிப்படையிலான பாலியல் வாட்ஸ்அப் குழு நடத்தி வந்த கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச நாடுகளுடன் தொடர்புள்ள இந்த விவாரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்தியா மட்டுமின்றி, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா என பல நாடுகளை சேர்ந்த காமக்கொடூரர்கள் இந்த வாட்ஸ்அப் குழுவில் இருந்துள்ளனர். மொத்தம் 119 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

WhatsApp-based child pornography racket busted

இதில் 5 பேர் அட்மின்களாக செயல்பட்டுள்ளார். முக்கிய குற்றவாளி அட்மினான உத்தரபிரதேசத்தை சேர்ந்த நிகில் வர்மா கைது செய்யப்பட்டுள்ளான். டெல்லி, உ.பி., மகாராஷ்டிராவை சேர்ந்த மேலும் 4 அட்மின்களான சத்யேந்திர சவுகான், நபீஸ் ராஜா, ஜாகித் மற்றும் ஆதர்ஷ் ஆகியோரின் இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்தியது.

அந்த இடங்களில் இருந்து, மோசமான வீடியோ மற்றும் போட்டோக்கள் அடங்கிய கம்ப்யூட்டர்கள், ஹார்ட் டிஸ்குகள், போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிறுமிகளை கடத்தி பலாத்காரம் செய்யும் கும்பலாக இது செயல்பட்டிருக்கலாம் என்றும் சிபிஐ சந்தேகிக்கிறது.

இதில் தொடர்புள்ளவர்கள் அமெரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, கென்யா, நைஜீரியா, மெக்சிகோ, பிரேசில் மற்றும் நியூசிலாந்தில் இருப்பதால் அந்த நாடுகளுக்கும் இதுதொடர்பாக கடிதம் எழுதி விவரம் கேட்டுள்ளது சிபிஐ.

English summary
The Central Bureau of Investigation (CBI) has arrested one of the administrators of a Whatsapp group in which child pornography material used to be circulated. The arrested group administrator, Nikhil Verma, is resident of Kannauj in Uttar Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X