புதிய வாய்ஸ் நோட் முறை.. 1 மணி நேரம் பின்பும் டெலிட் செய்யும் வசதி.. பரபர வாட்ஸ் ஆப் அப்டேட்!
வாட்சப் அப்ளிகேஷன் அப்டேட்டில் 1 மணி நேரம் கழித்தும் அனுப்பிய மெசேஜை திரும்ப பெறும் வசதி வர இருக்கிறது.
டெல்லி: வாட்சப் அப்ளிகேஷன் அப்டேட்டில் 1 மணி நேரம் கழித்தும் அனுப்பிய மெசேஜை திரும்ப பெறும் வசதி வர இருக்கிறது.
அதேபோல் வாய்ஸ் நோட் அனுப்புவதில் மாற்றம் வர இருக்கிறது. பேஸ்புக்கின் கைக்கு சென்ற பின் வாட்ஸ் ஆப்பில் தொடர்ந்து பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.
வரிசையாக அந்த அப்ளிகேஷனில் பல அப்டேட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே வீடியோ கால், வீடியோ ஸ்டேட்ஸ், லைவ் லொகேஷன் ஷேரிங் என பல வசதிகள் வாட்சப் புதிய அப்டேட்டில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
டெலிட்
இப்போது நாம் அனுப்பிய மெசேஜ்களை 7 நிமிடத்திற்குள் இரண்டு பேருக்கும் டெலிட் செய்யலாம். 7 நிமிடம் சென்றுவிட்டாள் நமக்கு மட்டுமே டெலிட் செய்ய முடியும். பாதுகாப்பிற்காக இந்த 7 நிமிட கணக்கு இருந்தது.
கூடுதல்
தற்போது இந்த நேரம் 1 மணி நேரமாக மாற்றப்பட்டு இருக்கிறது. 1 மணி நேரத்திற்குள் டெலிட் செய்து கொள்ள முடியும். ஆனால் இது நிறைய தற்காலிக மெமரியை பிடிக்கும் என்று கூறப்படுகிறது.
வாய்ஸ் நோட்
இதுவரை இருந்த வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் நோட் அனுப்புவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்து வந்தது. நாம் பேசும் வரை அதில் இருக்கும் மைக் சிம்பிளை அழுத்திக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் புதிய அப்டேட்டில் மைக்கை ஒருமுறை அழுத்தி மேலே தள்ளிவிட்டுவிட்டால் போதும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வாய்ஸ் ரெக்கார்ட் செய்ய முடியும்.
எப்போது வரும்
தற்போது வாட்ஸ் ஆப் பீட்டாவில் இந்த வசதி இருக்கிறது. இன்னும் சில நாளில் சாதாரண வாட்ஸ் ஆப்பில் இந்த வசதி வரும். பீட்டாவில் மிகவும் சரியாக இது செயல்படுகிறது.