சசிகலாவுடன் சிறையில் சட்டவிரோதமாக தங்கி சமைத்த பெண் 'ரஜினி'யா?
சசிகலாவுடன் சட்டவிரோதமாக தங்கி சமைத்த பெண் அவரது உதவியாளர் ரஜினியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெங்களூரு: பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுடன் சட்டவிரோதமாக தங்கி சமைத்தது அவரது புதிய உதவியாளர் ரஜினியா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
ஜெயலலிதா மறைந்த பின்னர் சசிகலாவுக்கு புதிய உதவியாளராக நியமிக்கப்பட்டவர் ரஜினி என்ற இளம் பெண். இவர்தான் சசிகலா கூவத்தூரில் முகாமிட்டபோது உடனிருந்து பணிவிடை செய்தார்.
இளம்பெண் ரஜினி
பின்னர் அதிமுக அலுவலகத்துக்கு சசிகலா வந்தபோதெல்லாம் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருப்பார் ரஜினி. அதேபோல் சசிகலா பெங்களூரு சிறைக்கு 'சபதம்' எடுத்துக் கொண்டு புறப்பட்ட போது அவரது காரிலேயே பயணித்தவர் இந்த ரஜினி.
பெங்களூரில் 'டேரா'
ஆனால் சசிகலா சிறையிலடைக்கப்பட்ட பின்னர் சென்னைக்கு இவர் அதிகம் வருவதில்லை. பெங்களூரில் பரப்பன அக்ரஹார சிறைக்கு அருகிலேயே ஒரு ஹெஸ்ட் அவுசில் தங்க வைக்கப்பட்டார்.
தர்பார் அம்பலம்
இந்நிலையில் சசிகலா சிறைக்குள் 5 அறைகளைக் கொண்டு தனி தர்பார் நடத்தியது, அங்கேயே வாய்க்கு ருசியாக சமைத்தது தொடங்கி ஜாலியாகவும் தெனாவெட்டாகவும் ஷாப்பிங் போனது வரை தற்போது அம்பலமாகிவிட்டது.
தங்கியிருந்தது ரஜினியா?
சசிகலா தம்முடன் ஒருவரை சட்டவிரோதமாக தங்க வைத்துதான் சமைத்தார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. அப்படி சட்டவிரோதமாக தங்கியிருந்தது ரஜினிதானா? என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.