ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போக இவர்தான் காரணமாமே!
Recommended Video
அமராவதி: நடிகை ரோஜாவுக்கு ஆந்திர மாநில அமைச்சரவையில் இடம் கிடைக்காமல் போக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளதான் எறு ஆந்திர அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ஆந்திராவில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் அமோகவெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி. அவரது அமைச்சரவையில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான ரோஜாவுக்கு முக்கிய இலாகா ஒதுக்கப்படும் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் அமைச்சரவையிலேயே ரோஜாவை சேர்க்கவில்லை ஜெகன்.
சரி துணை முதல்வர் பதவியாவது கிடைக்கும் என ரோஜாவின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அப்போதும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இது தொடர்பாக ஆந்திர செய்தியாளர்கள் மத்தியில் நாம் விசாரித்த போது, ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததற்கு காரணம் அவரே எனக் கூறினர்.
திமுகவுக்கு நாங்குநேரியா? டெல்லிக்கு படையெடுக்கும் தென்மாவட்ட காங்.-ன் எதிர்ப்பு கடிதங்கள்!
விரிவாக கூறுங்கள் எனக் கேட்டதற்கு, தேர்தல் முடிவு வந்தவுடன் ரோஜாவின் ஆதரவாளர்கள் ஓவர் தம்பட்டம் அடித்து ஆர்வக்கோளாறில் ரோஜாதான் ஆந்திராவின் கேம் சேஞ்சர் எனக் கொளுத்திப்போட்டனர்.
கடந்த இரண்டாண்டு காலமாக நடையாய் நடந்து அலைந்து திரிந்து மக்களை சந்தித்து ஜெகன் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வெற்றிக்கு ஏதோ ரோஜா தான் காரணம் என்கிற அளவுக்கு பேசத்தொடங்கினர் அவரது ஆதரவாளர்கள்.
இது ஜெகன்மோகன் ரெட்டியின் தாயார் விஜயம்மாளுக்கும், சகோதரி ஷர்மிளாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இப்போதே இப்படி படாபடமாக செயல்படும் ரோஜா, இன்னும் பதவிக்கு வந்தால் என்ன செய்வார் என ஜெகனின் அக்கா ஷர்மிளா மூத்த நிர்வாகிகளோடு விவாதித்தாராம்.
இதையடுத்து அமைச்சரவையில் ரோஜாவுக்கு கல்தா கொடுக்கும் முடிவு எடுக்கப்பட்டதாம் . ஜெகன் மீது சற்று வருத்தத்தில் உள்ள ரோஜா, சபாநாயகர் பதவியையாவது தனக்கு தாருங்கள் என ஜெகன் மோகன் ரெட்டி காதில் போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அதுவும் இப்போது கிடைக்கவில்லை.
நுணலும் தன் வாயால் கெடும் என்பதற்கு ரோஜாதான் லேட்டஸ்ட் உதாரணம் என்று ஆந்திராவில் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.