சாமியாரின் ஆணுறுப்பு வெட்டிய வழக்கில் புதிய திருப்பம்- அறுத்தது பெண்ணின் பாய் பிரண்ட்!
கேரளா சாமியாரின் ஆணுறுப்பை அறுத்தது மாணவியின் ஆண் நண்பர் என கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேரளா சாமியாரின் ஆணுறுப்பு வெட்டப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சாமியாரின் ஆணுறுப்பை அறுதத்தே மாணவியின் பாய் பிரண்ட் என்று அப்பெண்ணின் தாயார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
கேரளாவின் கொல்லத்தைச் சேர்ந்த கங்கேசானந்தா என்பவர் சாமியார் வேடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த தாய், மகள் இருவரையும் பல ஆண்டுகளாக சீரழித்து வந்திருக்கிறார். இந்நிலையில் சாமியாரின் கொடுமை தாங்காமல் அவரது ஆணுறுப்பை அப்பெண் வெட்டி வீசியதாக பரபர தகவல்கள் வெளியாகின.
திருவனந்தபுரத்தில்...
ஆணுறுப்பு அறுக்கப்பட்ட சாமியார் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தொடக்கத்தில் பதில் எதுவுமே சொல்லாமல் மவுனியாகத்தான் இருந்தார்.
நானே அறுத்தேன்
பின்னர் அந்தப் பெண் அறுத்து வீசவில்லை... நானே ஆணுறுப்பை அறுத்துவிட்டேன் என சமாளித்திருக்கிறார். இது தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மகளின் ஆண் நண்பர்
இப்போது புதிய திருப்பமாக, அப்பெண்ணின் தாயார் போலீசில் ஒரு தகவலை தெரிவித்திருக்கிறார். தமது மகள் மனநிலை சரியில்லாதவர்; அவரது ஆண் நண்பர்தான் சாமியாரின் ஆணுறுப்பை அறுத்தார்; சாமியாருடன் மகள் நெருக்கமாக இருப்பதை அந்த இளைஞர் விரும்பவில்லை...அதனால் அறுத்துவீசிவிட்டார் என கூறியுள்ளார்.
உண்மை அறியும் சோதனை
இது குறித்தும் கேரளா போலீசார் விசாரித்து வருகின்றனர். மூவரும் மாறி மாறி சொல்லும் நிலையில் ஆணுறுப்பை அறுத்த விவகாரத்துக்காக உண்மை கண்டறியும் சோதனைக்கு போகவும் கேரளா போலீசார்
அக்கப்போரா இருக்கே!