For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹர்டிக் படேலுக்கு குடிக்க தண்ணி கொடுத்தது யாரு.. இது குஜராத் கூத்துங்கோ!

Google Oneindia Tamil News

Recommended Video

    ஹர்டிக் படேலுக்கு குடிக்க தண்ணி கொடுத்த சரத் யாதவ்

    அகமதாபாத்: குஜராத் மாநிலம், காந்தி நகரில் நடைபெற்ற போட்டித் தேர்வில் உண்ணாவிரதம் இருந்த ஹார்திக் படேலுக்கு தண்ணீர் வழங்கியது யார் என கேள்வி எழுப்பப்பட்டது.

    படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரியும் குஜராத்தில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய கோரியும் ஹார்திக் படேல் என்பவர் 19 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவர் தனது உண்ணாவிரதத்தை கடந்த மாதம் 25-ஆம் தேதி தொடங்கினார்.

    Who offered water to Hardik Patel question in Gujarat exam?

    பின்னர் அவர் 6-ஆம் தேதி முதல் தண்ணீர் அருந்துவதையும் தவிர்த்தார். அடுத்த நாளே அவர் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர் 8-ஆம் தேதி மருத்துவமனை சென்ற சரத் யாதவ் நீர் ஹார்திக்கிற்கு நீர் வழங்கினார். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் 9-ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்தார். இதையடுத்து செப்டம்பர் 12-ஆம் தேதி அவர் தனது உண்ணாவிரத்தை முடித்துக் கொண்டார்.

    இந்நிலையில் காந்தி நகரில் உதவியாளர் பணிக்காக தேர்வு நடைபெற்றது. இதில் ஹார்திக் படேலுக்கு தண்ணீர் வழங்கியவர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது.சரத் யாதல், சத்ருகன் சின்ஹா, லாலு பிரசாத், விஜய் ரூபானி உள்ளிட்டோரில் ஹார்திக் படேலுக்கு தண்ணீர் வழங்கியது யார் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

    இதற்கு சரியான பதில் சரத் யாதவ் ஆகும். ஒரு பரீட்சை கேளிவியாக அண்ணா பிறந்த நாள் விழாவுக்கு கேள்வி கேட்கப்பட்டது.

    English summary
    Candidates appearing in a competitive examination held for clerical posts in the Gandhinagar civic body on Sunday were asked a question related to Patidar leader Hardik Patel.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X