சென்டினல் தீவு பயங்கரம்.. கொல்லப்பட்ட அமெரிக்கர் உடலை எப்படி மீட்பது.. குழப்பம்!
அந்தமான் தீவுகளில் சென்டினேலீஸ் ஆதிவாசிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஜான் ஆலன் உடலை இன்னும் அதிகாரிகள் மீட்கவில்லை.
Recommended Video
சென்டினல்: அந்தமான் தீவுகளில் சென்டினேலீஸ் ஆதிவாசிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஜான் ஆலன் உடலை இன்னும் அதிகாரிகள் மீட்கவில்லை.
அந்தமானில் உள்ள சென்டினல் தீவு உலகின் மர்மமான தீவுகளில் ஒன்று. இங்கு வசிக்கும் சென்டினேலீஸ் மக்கள், தங்களை உலகின் பிற மக்களிடம் இருந்து பிரித்து, தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
கிட்டத்தட்ட 12 ஆயிரம் வருடமாக அவர்கள் அங்கு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் கடந்த வாரம் அங்கு செல்ல முயன்று போது ஜான் ஆலன் என்ற அமெரிக்கர் கொலை செய்யப்பட்டார்.
கொன்றனர்
ஜான் ஆலன், கடந்த வாரம் 14ம் தேதி அங்கு சென்றுள்ளார். அப்போது அவர் சென்டினேலீஸ் மக்களால் சிறை பிடிக்கப்பட்டார். அவரை சென்டினேலீஸ் மக்கள் மூன்று நாட்கள் வைத்து துன்புறுத்தி இருக்கிறார்கள். அதன்பின் அவரை கொலை செய்துள்ளனர்.
மதத்தை பரப்ப
இந்த நிலையில் அவர் கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்காக அங்கு சென்றுள்ளார் என்று நேற்று செய்திகள் வந்தது. கிறிஸ்துவ மிஷனரி ஒன்றில் பகுதி நேரமாக பணியாற்றி வந்த ஜான், கிறிஸ்துவ மதம் குறித்து அந்த சென்டினேலீஸ் மக்களிடம் பிரச்சாரம் செய்ய அங்கு சென்று உள்ளார்.
உடலை எப்படி மீட்பது
இந்த நிலையில் கொல்லப்பட்ட அவரின் உடல் இன்னும் அந்த தீவில்தான் இருக்கிறது. சென்டினல் தீவின் கடற்கரையில்தான், ஜானை சென்டினேலீஸ் மக்கள் புதைத்து இருக்கிறார்கள். அந்த உடலை எப்படி மீட்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெரிய அச்சம்
அந்த தீவிற்குள் செல்ல அதிகாரிகளுக்குள் பெரிய அளவில் அச்சம் நிலவுகிறது. அங்கு செல்ல யாரும் விருப்பப்படவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் யார் சென்று அந்த அமெரிக்கரின் உடலை மீட்பார்கள் என்று கேள்வி எழுந்து இருக்கிறது.