For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷீனா கொலையில் உங்க அப்பாவுக்குத் தொடர்பிருக்கிறதா?.. மெளனம் காத்த ராகுல் முகர்ஜி

Google Oneindia Tamil News

மும்பை: ஷீனா போரா கொலையில் உங்களது தந்தைக்குத் தொடர்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் மெளனம் காத்துள்ளார் பீட்டர் முகர்ஜியின் மகனும், ஷீனாவைக் காதலித்தவருமான ராகுல் முகர்ஜி.

ஷீினா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா, இந்திராணியின் மகன் மிக்கயில் போரா உள்ளிட்டோரை விசாரித்துள்ளது மும்பை போலீஸ்.

இந்த நிலையில் பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவிக்குப் பிறந்தரவான ராகுல் முகர்ஜியிடமும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இவரும், ஷீனாவும்தான் காதலித்து வந்தனர். குடும்பமும் நடத்தி வந்தனர். இதுவே ஷீனாவை இந்திராணி கொல்லக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ராகுலிடம் நடத்தப்பட்ட விசாரணையின் சில விவரங்கள் தெரிய வந்துள்ளன.

யாருமே சொல்லவில்லை

யாருமே சொல்லவில்லை

போலீஸ்: 2012க்குப் பிறகு ஏன் ஷீனாவைத் தொடர்பு கொள்ள நீங்கள் முயற்சிக்கவில்லை?
ராகுல்: யாரிடம் கேட்டாலும் அவரைப் பற்றிய தகவல்களைச் சொல்லவில்லை, சொல்லவும் மறுத்தனர்.

இன்னும் வேகமாக ஏன் தேட முயற்சிக்கவில்லை?

இன்னும் வேகமாக ஏன் தேட முயற்சிக்கவில்லை?

போலீஸ்: நீங்கள் ஷீனாவுடன் கிட்டத்தட்ட 6 வருடத்திற்கும் மேலாக தொடர்பு வைத்திருந்தீர்கள். இன்னும் தீவிரமாக அவரைத் தேட முயற்சித்திருக்கலாமே. ஏன் அதைச் செய்யவில்லை?
ராகுல்: நான் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கக் கூட முடிவு செய்து வந்து விட்டேன். ஆனால் இந்திராணிதான் புகார் தர விடாமல் தடுத்து விட்டார்.

ஏன் அனுப்பினீர்கள் என்று கேட்டீர்களா?

ஏன் அனுப்பினீர்கள் என்று கேட்டீர்களா?

போலீஸ்: ஏன் ஷீனாவை அமெரிக்காவுக்கு அனுப்பினீர்கள் என்று இந்திராணியிடமோ, பீட்டரிடமோ கேட்டீர்களா?
ராகுல்: படிப்புக்காக அனுப்பியிருப்பதாக இருவரும் கூறினர்.

ஷீனாவை விட்டு விலகுமாறு இந்திராணி கூறினாரா?

ஷீனாவை விட்டு விலகுமாறு இந்திராணி கூறினாரா?

போலீஸ்: இந்திராணி எப்போதாவது, ஷீனாவிடமிருந்து உங்களை விலகுமாறு கூறியிருக்கிறாரா?
ராகுல்: பலமுறை. என்னை மிரட்டக் கூட செய்தார்.

சஞ்சீவ் கன்னாவைத் தெரியாது

சஞ்சீவ் கன்னாவைத் தெரியாது

போலீஸ்: சஞ்சீவ் கன்னாவைத் தெரியுமா?
ராகுல்: தெரியாது.

சித்தார்த் தாஸைத் தெரியாது

சித்தார்த் தாஸைத் தெரியாது

போலீஸ்: சித்தார்த் தாஸைத் தெரியுமா?
ராகுல்: தெரியாது.

மிக்கயிலைத் தெரியுமா?

மிக்கயிலைத் தெரியுமா?

போலீஸ்: மிக்கயிலைத் தெரியுமா?
ராகுல்: தனது தம்பி என்று ஷீனா என்னிடம் கூறியுள்ளார்.

ஷீனா கொல்லப்பட்டாரா?

ஷீனா கொல்லப்பட்டாரா?

போலீஸ்: ஷீனா கொல்லப்பட்டாரா?
ராகுல்: எனக்குத் தெரியாது.

அப்பாவுக்குத் தொடர்பு உள்ளதா?

அப்பாவுக்குத் தொடர்பு உள்ளதா?

போலீஸ்: இந்த கொலை வழக்கில் உங்களது தந்தைக்கும் தொடர்பு இருக்கலாம் என கருதுகிறீர்களா?
ராகுல்: (பதில் இல்லை - பெருத்த அமைதி)

உங்களுக்குத் தொடர்பு இருக்கிறதா?

உங்களுக்குத் தொடர்பு இருக்கிறதா?

போலீஸ்: இந்த வழக்கில் எந்த வகையிலாவது உங்களுக்குத் தொடர்பு இருக்கிறதா?
ராகுல்: உங்களிடம் முக்கியக் குற்றவாளியே பிடிபட்டுள்ளார். அவரிடம் கேட்டால் தெரிந்து விடப் போகிறது.

யார் கொன்றது ஷீனாவை?

யார் கொன்றது ஷீனாவை?

போலீஸ்: ஷீனாவை யார் கொன்றிருக்கலாம் என கருதுகிறீர்கள். என்ன காரணத்திற்காக கொன்றிருக்கலாம்?
ராகுல்: எனக்குத் தெரியாது. ஆனால் கொன்றது யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் ராகுல்.

English summary
Rahul Mukerjeak, the son of Peter Mukerjea has said that whoever the culprit is should be punished in Sheena Bora case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X