தமிழக அரசு புதிய அணைகளை ஏன் கட்டக்கூடாது? காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி!
தமிழக அரசு புதிய அணைகளை ஏன் கட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லி: தமிழகத்தில் புதிய அணைகளை மாநில அரசு ஏன் கட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
காவிரியில் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடாக அரசு அணைக்கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அதில் தமிழகத்தை கலந்தாலோசிக்காமல் கர்நாடக புதிய அணைக்கட்டுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் மாநில அரசு ஏன் புதிய அணைகளை கட்டக்கூடாது என கேள்வி எழுப்பினர். அணைகளை கட்டும் கர்நாடகாவை மட்டும் ஏன் தமிழக அரசு குற்றம் சாட்டுகிறது என்றும் நீதிபதிகள் கேள்வி சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
மேலும் கர்நாடக அரசு அணைக்கட்டுவதற்கு மட்டும் ஏன் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்றும் நீதிபதிகள் வினா எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழக அரசு, தமிழகத்தில் புதிய அணைகளை கட்டும் அளவுக்கு புயியல் அமைப்பு இல்லை என்ற தெரிவித்தது.