புதுப்புடவை வாங்கித்தரலையே... கோபத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்த புதுப்பெண்
வீட்டு விசேசத்திற்கு புதுப்புடவை வாங்கிக்கொடுக்காத கணவன் மீது கோபம் கொண்ட புதுப்பெண் மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அலிகார்: சின்னச் சின்ன விசயத்திற்கெல்லாம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றனர். புதிதாக திருமணமான இளம் பெண் ஒருவர் வீட்டு விசேசத்திற்கு கட்டிக்கொள்ள புதுப்புடவை வாங்கித்தராத கணவன் மேல் கோபம் கொண்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரை சேர்ந்த அமித் என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அஞ்சனாவிற்கும் கடந்த மே மாதம் 13ஆம் தேதியன்று திருமணம் நடந்தது. சந்தோசமான திருமண வாழ்க்கையில் சிறு சண்டை கூட ஏற்படவில்லை. விதி சேலை வடிவில் விளையாடியது.
கடந்த வாரம் சனிக்கிழமையன்று அமித் வீட்டில் சிறு விசேசத்திற்கு ஏற்பா செய்திருந்தனர். அப்போது பீரோவை திறந்து பார்த்த அஞ்சனாவிற்கு நல்லதாக புடவை எதுவும் இல்லையே என்று வருத்தப்பட்டார்.
கணவனிடம் புது புடவை வேண்டும் என்றும் கேட்டார். அதற்கு கணவன் அமித், இப்போது புடவை வேண்டாம் என்று கூறி சமாளித்தார். ஆனாலும் அஞ்சனாவின் மனது சமாதானம் ஆகாவில்லை. கோபத்தோடு சண்டை போட்டார். அதற்கு அமித் ஒருவழியாக பேசி சமாதானம் செய்து விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.
கோபத்தோடு இருந்த அஞ்சனாவோ, பதற்றமான நிலையில் மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டை விட்டு வெளியே போய்விட்டு வந்த அமித், தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். போலீசில் தகவல் கூறினார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அஞ்சனாவின் அப்பா ஆதார் சிங் சம்பவ இடத்திற்கு வந்து தனது மகள் வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறி போலீசில் புகார் அளித்துள்ளார்.