மனைவியின் செல்போனை ஆராய்ந்ததால் ஆத்திரம்... கணவருக்கு அரிவாள் வெட்டு
உத்தரப் பிரதேசத்தில் தனது செல்போனை ஆராய்ந்ததால் ஆத்திரம் அடைந்த மனைவி கணவரை அரிவாளால் வெட்டினார்.
உத்தரப் பிரதேசத்தில் தனது செல்போனை ஆராய்ந்ததால் ஆத்திரம் அடைந்த மனைவி கணவரை அரிவாளால் வெட்டினார்.
லக்னோ: மனைவியின் வாட்ஸ் ஆப் சாட்களை கணவர் பார்க்க முயற்சித்ததால் ஆத்திரமடைந்து அவரை அரிவாளால் வெட்டினார். இதனால் காயமடைந்த கணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அன்றைய காலகட்டங்களில் கணவருக்கு வரும் கடிதாசிகளை மனைவியும், மனைவிக்கு வரும் கடிதங்களை கணவரும் பார்த்து படித்தனர். எந்த ஒளிவு மறைவுமின்றி இருந்தனர்.
ஆனால் இன்றைய காலகட்டங்களில் கணவர், மனைவி ஆகியோருக்கு வரும் பார்சல், கடிதங்களை படிப்பது என்பது நாகரீகம் இல்லை என்றாகிவிட்டது. அதேபோல் செல்போன்களில் வரும் எஸ்எம்எஸ், இ-மெயில்களையும் பரஸ்பரம் மாறி படிப்பதில்லை.
நம்பிக்கை அதிகம்
இதற்கு காரணம் ஒருவர் மேல் மற்றொருவர் வைத்திருக்கும் நம்பிக்கை அதிகம் என்று சொல்லலாம். இருவரும் பரஸ்பரம் துரோகம் செய்ய மாட்டார்கள் என்ற எண்ணமும் காரணமாக இருக்கலாம்.
லக்னோவில்...
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நேத்ரபால் சிங்(21), நீது சிங்(19) ஆகியோர் ஆவர். இருவரும் கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே பிரிந்து தனித்தனியே வாழ தொடங்கினர்.
வாட்ஸ் ஆப் மூலம் சாட்டிங்
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நேத்ரபால் சிங் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நீது சிங் கலந்து கொண்டார். நீது சிங் வாட்ஸ் அப் மூலம் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நேத்ரபால் சிங் போனை கேட்டுள்ளார்.
நீது மறுப்பு
போனை தர நீது சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியிடம் இருந்து போனை பறித்துள்ளார். இதில் கோபமடைந்த நீது, அருகில் இருந்த அரிவாளை எடுத்து தனது கணவரை வெட்டியுள்ளார். படுகாயம் அடைந்த கணவர் உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.