கண்டிப்பாக சபரிமலை செல்வேன்.. மாற்றமில்லை.. கேரள ஆசிரியை ரேஷ்மா அதிரடி!
சபரிமலை கோவிலுக்குள் இன்று மாலை நுழைந்தே தீருவேன் என்று கூறியுள்ளார் கண்ணுரை சேர்ந்த ரேஷ்மா நிஷாத்.
Recommended Video
கண்ணூர்: சபரிமலை கோவிலுக்குள் இன்று மாலை நுழைந்தே தீருவேன் என்று கூறியுள்ளார் கண்ணுரை சேர்ந்த ரேஷ்மா நிஷாத்.
சபரிமலை கோவிலுக்குள் கண்டிப்பாக செல்வேன் என்று கூறியுள்ளார் ரேஷ்மா நிஷாத். கண்ணூர் அருகே இருக்கும் செருக்குன்னு என்று கிராமத்தை சேர்ந்தவர் இவர்.
ரேஷ்மா கல்லூரி ஆசிரியராக இருக்கிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் போட்ட பேஸ்புக் போஸ்டில் சபரிமலை கோவிலுக்குள் செல்ல போவதாக அறிவித்தார். தன்னுடன் விருப்பம் உள்ள பெண்களும் வரலாம் என்றும் கூறினார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த 40 வயதான மாதவி.. புதிய வரலாறு படைத்தார்!
பெரிய தாக்குதல்
இவரது போஸ்ட் பெரிய அளவில் வைரல் ஆனது. இதையடுத்து இந்துத்துவா அமைப்புகள் எப்போதும் போல இவருக்கு எதிராக குதித்தது. அதன்படி, இவரது வீட்டிற்கு வெளியே நின்று போராட்டம் செய்தனர். மேலும், இவர் தீர்ப்பு வந்ததில் இருந்தே விரதம் இருந்துள்ளார். சரியாக விரதம் இருந்து கோவிலிக்கு செல்ல தயாராகி உள்ளார்.
பணியில் இருந்து விலகினார்
இந்த நிலையில் இவர் தனது கல்லூரி ஆசிரியர் பணியில் இருந்து விலகி உள்ளார். நேற்று கல்லூரிக்கு கால் செய்த இவர் தன்னுடைய பணியில் இருந்து விலகுவதாக தெரிவித்து இருக்கிறார். குடும்பத்தை கவனிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.
கோவில்தான் முக்கியம்
இவர் தனக்கு கோவில்தான் முக்கியம் என்று கூறியுள்ளார். சபரிமலையா, பெண்கள் உரிமையா இல்லை கல்லூரியா என்ற போது பெண்கள் உரிமைதான் முக்கியம் என்று முடிவெடுத்து இருப்பதாக கூறியுள்ளார். இதன் காரணமாகவே இவர் தனது வேலையை விட்டுவிட்டதாக கூறியுள்ளார்.
இன்று செல்கிறார்
இந்த நிலையில் இன்று அவர் கோவிலுக்குள் செல்ல இருக்கிறார். இன்று மாலை நடை திறந்ததும் கோவிலுக்கு செல்ல இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார்கள். தன் கணவர் மற்றும் குடும்பத்தினருடன் செல்ல போவதாக தெரிவித்துள்ளார். யார் தடுத்தாலும் கோவிலுக்கு செல்வது உறுதி என்றுள்ளார்.