இன்று உலகம் அழியப் போகிறதாம்: இன்று தான் நமக்கு எல்லாம் கடைசி நாளா?
டெல்லி: உலகம் இன்று அழிந்துவிடும் என்று கிறிஸ்தவ இ-பைபிள் குழு தலைவர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
உலகம் அழியப் போகிறது என்று அவ்வப்போது செய்திகள் வருவதை மக்கள் பரப்பரப்பாக படிப்பது உண்டு. உலகம் அழியப் போகிறது என்று இரண்டு முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும் நாம் பிழைத்துக் கொண்டோம். மாயன் காலண்டரின்படி 2012ம் ஆண்டு உலகம் அழியும் என்று கணிக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த மாதம் ரத்த சிவப்பு நிலா வருகையில் உலகம் அழியும் என்று கூறப்பட்டது.
அந்த இரண்டு முறையும் உலகம் அழியவில்லை. இந்நிலையில் தான் அமெரிக்காவின் பிலடெல்பியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கிறிஸ்தவ இ-பைபிள் குழுவின் தலைவர் கிறிஸ் மெக்கான் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
பைபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி அக்டோபர் 7ம் தேதி தான் கடவுள் பேசினார். அன்றைய தினம் உலகம் அழியும். அந்த தினத்தில் நிச்சயம் உலகம் அழியும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.