4 டிஎம்சி நீரை தர கர்நாடகா மறுப்பு.. காவிரி நீர் தர முடியுமா முடியாதா? சுப்ரீம் கோர்ட் கோபம்
4 டிஎம்சி நீரை தர கர்நாடகா மறுத்ததால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கோபமடைந்தனர்.
Recommended Video
டெல்லி: 4 எம்எம்சி நீரை தர கர்நாடகா தர மறுத்ததால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கோபமடைந்தனர்.
காவிரி விவகாரம் குறிம்ம வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
அப்போது காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய கால அவகாசம் முடியும் நிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. தற்போது மத்திய அரசு கூடுதலாக இன்னும் 2 வாரம் கால அவகாசம் கேட்டுள்ளது. நேரடியாக எழுத்துபூர்வமாக அவகாசம் கேட்காமல், வாய்மொழி அவகாசம் கேட்டது.
ஒப்புதல் பெற முடியவில்லை
பிரதமரும், அமைச்சரும் தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளதால் ஒப்புதல் பெற முடியவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடகா மறுப்பு
இதைத்தொடர்ந்து தமிழகத்திற்கு இம்மாதம் 4 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. ஆனால் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்துவிட்டது.
தர முடியுமா? முடியாதா?
இதனால் கோபமடைந்த நீதிபதிகள் காவிரி நீர் தர முடியுமா முடியாதா? கேள்வி எழுப்பினர். அப்போது கர்நாடகா தரப்பில் சட்டசபை தேர்தலை காரணம் காட்டப்பட்டது.
அரசியல் காரணங்கள்
இதற்கு பதிலளித்த நீதிபதிகள் காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்கமுடியாது என்றனர். கர்நாடகாவில் தேர்தல் என்பதையெல்லாம் ஏற்க முடியாது என்றும் சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.
சுப்ரீம்கோர்ட் எச்சரிக்கை
தண்ணீர் திறக்கும் உத்தரவை மீறினால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது.