ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் 69 ஆக அதிகரிப்பு- பெரும்பான்மைக்கு வியூகம் வகுக்கிறது!
ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் 69 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லி: ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் 69 ஆக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பெரும்பான்மையைப் பெறுவதற்கான வியூகத்தை வகுத்து வருகிறது பாஜக.
ராஜ்யசபாவில் காலியான 58 இடங்களுக்கான தேர்தல் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. இதில் 10 மாநிலங்களைச் சேர்ந்த 33 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வாகினர். இதில் பாஜக வேட்பாளர்கள் 16 பேர் அடங்குவர். எஞ்சிய 25 இடங்களுக்கான தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் 12 பேர் வென்றனர்.
மொத்தம் 58 இடங்களில் பாஜக-28; காங்கிரஸ் 10 எம்.பிக்களைப் பெற்றது. இதர கட்சிகளுக்கு 20 எம்.பி.க்கள் கிடைத்தனர்.
இதையடுத்து தற்போது ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் அதிகரித்துள்ளது. தற்போது ராஜ்யசபாவில் பாஜக- 69; காங்கிரஸ் 50; திரிணாமுல் 13; சமாஜ்வாதி- 16; பிஜூ ஜனதா தளம்- 10; பகுஜன் சமாஜ் -5 எம்.பிக்கள் உள்ளனர்.
ராஜ்யசபாவில் பலத்தை உயர்த்தியுள்ள பாஜக, பெரும்பான்மையை பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறது.