கண் விழித்தபோது ஒரே ரத்தம், கோவா எம்.எல்.ஏ. நிர்வாணமாக இருந்தார்: சிறுமி வாக்குமூலம்
பனாஜி: கண்விழித்து பார்த்தபோது உடை எல்லாம் ரத்தமாக இருந்ததாகவும், கோவா எம்.எல்.ஏ. மான்சராட்டே நிர்வாணமாக தனது அருகில் அமர்ந்திருந்ததாகவும் நேபாளத்தை சேர்ந்த 16 வயது சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவாவில் உள்ள செயின்ட் க்ரூஸ் தொகுதி எம்.எல்.ஏ. அடானாசியோ மான்சராட்டே. அவர் நேபாளத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,
நான் நேபாளத்தை சேர்ந்தவள். என் மாற்றாந்தாய் மற்றும் ஆன்ட்டி ஒருவர் என்னை எம்.எல்.ஏ.விடம் விற்றுவிட்டனர். அவர் என்னை அவரின் பங்களாவுக்கு கடந்த மார்ச் மாதம் அழைத்து சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார்.
குளிர்பானத்தை குடித்தவுடன் நான் மயங்கிவிட்டேன். மறுநாள் காலையில் கண்விழித்தபோது என் உடை எல்லாம் ரத்தமாக இருந்தது. எம்.எல்.ஏ. என் அருகே நிர்வாணமாக அமர்ந்திருந்தார் என்றார்.