For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனைவியை கடத்திச் சென்று நண்பர்களோடு சேர்ந்து பலாத்காரம் செய்த கணவன்.. உ.பி.யில் அதிர்ச்சி

திருமணமான சில நாட்களிலேயே அந்த பெண் கணவரை பிரிந்து தனது பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்ததுள்ள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், நண்பர்களை கூட்டு சேர்த்துக்கொண்டு, அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார் அந்த

By Veera Kumar
Google Oneindia Tamil News

கான்பூர்: கணவர் மற்றும் அவரது 2 நண்பர்கள் தன்னை கடத்தி பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி.மாநிலம், உர்சுலா ஹார்ஸ்மேன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அந்த பெண்ணை கணவரும், அவரது நண்பர்கள் இருவரும் கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாக அப்பெண் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் 3 பேர் மீதம் வழக்குப்பதிவு செய்ததனர். மூவருமே தற்போது தலைமறைவாக உள்ளனர். இந்த பலாத்கார சம்பவம் பிப்ரவரி 18ம் தேதி நடைபெற்றுள்ளது.

Woman accused her husband and his two friends of gangraping her

திருமணமான சில நாட்களிலேயே அந்த பெண் கணவரை பிரிந்து தனது பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்ததுள்ள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், நண்பர்களை கூட்டு சேர்த்துக்கொண்டு, அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார் அந்த கணவர்.

சாலையோரத்தில் வீசப்பட்ட அப்பெண், மயக்கம் தெளிந்த பிறகு குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் உதவியோடு காவல்துறையை நாடியுள்ளார்.

கடத்தப்படுவதற்கு முன்பு அப்பெண் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையிலேயே தற்போது பலாத்காரம் தொடர்பாக மீண்டும் மருத்துவபரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

English summary
Woman has accused her husband and his two friends of allegedly abducting her and gangraping her and leaving her in an unconscious state in Utterpradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X