For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓடும் ரயிலில்.. லேடீஸ் கோச்சில் பெண் பலாத்காரம்.. நகைகள் கொள்ளை.. டெல்லி ஷாக்!

டெல்லியில் ஓடும் ரயில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி : ஷதாரா - டெல்லி ரயில்வே ஸ்டேஷன் இடையே பெண்களுக்கான பெட்டியில் ஏறிய 3 பேர் அதில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் நடைபெறும் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக ரயிலில் பெண்களுக்கான பெட்டியில் பயணம் செய்துள்ளார். அந்தப் பெட்டியில் பயணித்த மற்ற 4 பெண்கள் ஷதாரா ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியுள்ளனர். அப்போது அங்கிருந்து 3 ஆண்கள் பெண்கள் பெட்டியில் ஏறியுள்ளனர்.

woman allegedly raped and robbed her bag in moving train Delhi!

அவர்களில் 2 பேர் அந்தப் பெண் வைத்திருந்த நகைப்பையை திருடிக்கொண்டு தப்பியோடிவிட்டனர். மூன்றாவது நபர் அவரை அடித்து தாக்கியதோடு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அடுத்த ஸ்டேஷனில் ஏறிய 2 போலீஸ் காவலர்கள் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அந்த பெண் போராடுவதைக் கண்டனர்.

இதையடுத்து அந்த நபரை பிடித்து 'கவனித்த' போலீசார் பழைய டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி 2 பேரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பெயர் ஷபாஸ் என்பதும் அவருககு 25 வயது என்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் நகையுடன் தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர். ஓடும் ரயிலில் பெண் ஒருவரை பலாத்காரம் செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A woman was allegedly raped and robbed of her jewel bag in the ladies coach of a moving train.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X