For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ன பொம்பளை புள்ளையா பெத்துட்டு இருக்கே.. 5-வதும் பொண்ணா? நீ வேணாம்.. முத்தலாக் சொன்ன கணவர்!

மனைவிக்கு போனில் முத்தலாக் சொல்லி உள்ளார் கணவன்

Google Oneindia Tamil News

கான்பூர்: "என்ன ஒரே பொம்பளை புள்ளையவே பெத்து போட்டுட்டு இருக்கே.. 5-வதும் பொண்ணா? எனக்கு நீ வேணவே வேணாம்" என்று சொல்லி மனைவிக்கு கணவன் முத்தலாக் தந்துவிட்டார்.

இதுநாள்வரை கல்யாணம் ஆன இஸ்லாமிய ஆண் ஒருவர், தன் மனைவியை 3 தடவை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை நிலவி வந்தது. இந்நிலையில், முத்தலாக்கை தடை செய்ய கடந்த ஆண்டு முதலே முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின்பேரில், பின்னர் இந்த மசோதாவை கொண்டு வந்தது.

ஆனால், இது மக்களவையில் நிறைவேறினாலும், மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இருந்தாலும், முத்தலாக்கை தடை செய்து கடந்த பிப்ரவரி மாதம் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.

'அப்பாடா புரட்டாசி போயிடுச்சி.. எடுடா அந்த மஞ்சப்பைய.. மட்டன் வாங்க போகனும்'.. வைரல் மீம்ஸ்கள்'அப்பாடா புரட்டாசி போயிடுச்சி.. எடுடா அந்த மஞ்சப்பைய.. மட்டன் வாங்க போகனும்'.. வைரல் மீம்ஸ்கள்

பிரதமர்

பிரதமர்

இப்போது மோடி 2-வது முறையாக பிரதமர் ஆனதை அடுத்து, முத்தலாக் மசோதா திரும்பவும் கொண்டு வரப்பட்டு, அது கடந்த ஜூலை 25ந்தேதி, மக்களவையில் நிறைவேறியது. அதேபோல, கடந்த ஜூலை 30ந்தேதி, மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு, அங்கும் நிறைவேறியது.

மெசேஜ்

மெசேஜ்

முத்தலாக் சட்டம் அமலுக்கு வந்த பிறகு முத்தலாக் சொல்லும் பலர் மீது வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. இன்னமும் சில ஆண்கள் ஒரு சில காரணங்களை காட்டி முத்தலாக் சொல்லி கொண்டேதான் இருக்கிறார்கள். ஒருத்தர் மனைவிக்கு தபால் மூலம் முத்தலாக் சொன்னார், இன்னொருத்தர் வாட்ஸ்அப் மெசேஜில் முத்தலாக் சொன்ன சம்பவங்களும் நடந்து வருகின்றன.

கல்யாணம்

கல்யாணம்

இப்போது, ஒரு மனைவிக்கு தொடர்ந்து பெண் குழந்தையாகவே பிறப்பதாக சொல்லி கணவர் முத்தலாக் தந்துள்ளார். உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் வசித்து வருகிறார் அந்த பெண். 11 வருஷத்துக்கு கமீல் என்பவருடன் முன்பு கல்யாணம் ஆகி உள்ளது. இவர்களுக்கு 4பெண் குழந்தைகள் உள்ளனர்.

போனில் முத்தலாக்

போனில் முத்தலாக்

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு திரும்பவும் பெண் குழந்தை பிறந்தது. மனைவிக்கு 5-வதும் பெண் குழந்தை என்று கேள்விப்பட்டதால் டென்ஷன் ஆகிவிட்டார் கணவர். அதனால் மனைவிக்கு போன் செய்து, "என்ன ஒரே பொம்பளை புள்ளையவே பெத்து போட்டுட்டு இருக்கே" என்று கேட்டு முத்தலாக் தந்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி, அந்த முத்தலாக்கை ஏற்க மறுத்ததுடன் அஸ்மோலி ஸ்டேஷனில் கமில் மீது புகார் அளித்துள்ளார்.

English summary
woman was allegedly given Triple Talaq by her husband over phone for their 5th girl child
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X