பாலியல் சீண்டல்.. பொறுத்து பொறுத்து பார்த்து.. பொங்கி எழுந்த பெண்.. கட்டி வைத்து என்னா அடி.. வீடியோ
பாலியல் தொல்லை தந்த இளைஞரை அடித்து தாக்கியுள்ளார் ஒரு பெண்
Recommended Video
தெலுங்கானா: பொறுத்து பொறுத்து பார்த்து வெறுத்தே போய்விட்டார் அந்த பெண்.. பாலியல் தொல்லை எல்லை மீறவும், இளைஞனை மரத்தில் கட்டி வைத்து, செருப்பை கழட்டி அடித்திருக்கிறார்! இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணமானது.
ஆனால் கல்யாணம் ஆன பெண் என்று தெரிந்தும், இளைஞர் ஒருவர் நீண்டகாலமாகவே பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.
கவுசல்யா மீது ஓவர் சந்தேகம்.. கொலை செய்து.. மூட்டை கட்டி கிணற்றில் போட்ட கணவன்!
பொறுமை
இதன் காரணமாக, அந்த பெண் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார். இதை எப்படி வெளியில் சொல்வது, யாரிடம் சொல்வது என்று தெரியாமல் மனதுக்குள்ளேயே தவித்து வந்துள்ளார். ஆனாலும் இளைஞர் பாலியல் சீண்டலில் எல்லை மீறி கொண்டே இருப்பதை உணர்ந்த அந்த பெண் ஒருகட்டத்தில் பொறுமை இழந்துவிட்டார்.
ஐடியா
அதனால் நேராக தன் கணவரிடம் எல்லாவற்றையும் சொல்லி அழுதுள்ளார். இதைக் கேட்டு திகைத்த கணவனோ, அந்த இளைஞனை வீட்டுக்கு பேசி வரவழைக்கும்படி மனைவிக்கு ஐடியா தந்துள்ளார். அதன்படியே அந்த பெண்ணும் செய்துள்ளார். கணவன் வீட்டுக்குள்ளேயே ஒரு ஓரமாக மறைந்து நின்றிருந்தார்.
இளைஞன்
வீட்டுக்கு வந்த இளைஞன், இப்போது இன்னும் அதிகமாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தவறாகவும் நடக்க முயற்சித்துள்ளார். இதை பார்த்த அந்த கணவர் ஓடிவந்து, இளைஞரை மடக்கி பிடித்து அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்தார். பிறகு தான் அணிந்திருந்த ஷூவை கழட்டி, மனைவியிடம் தந்து, இளைஞனை வெளுக்க சொன்னார்.
கைது
மனைவியும், இவ்வளவு நாள் அடக்கி வைத்த ஆத்திரத்தை மனதில் வைத்து சரமாரியாக பின்னி எடுத்துவிட்டார். போலீசார் வந்து சேரும்வரை, அந்த இளைஞனுக்கு அடி விழுந்துகொண்டே இருந்தது. இதையடுத்து தம்பதி இருவரும் இளைஞனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பாலியல் தொல்லை தந்த இளைஞனை, பெண் ஒருவர் மரத்தில் கட்டி வைத்து செருப்பால் அடிக்கும் இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.