தேவய்யா.. இது தேவையாய்யா.. படுக்கைக்கு கூப்பிட்ட பேங்க் மேனேஜரை வெளுத்த பெண்!
Recommended Video
தாவணகரே: கர்நாடக மாநிலம் தாவணகரேவில் படுக்கைக்குக் கூப்பிட்ட வங்கி மேலாளரை நடு ரோட்டில் விட்டு கட்டையால் சாத்து சாத்தென்று சாத்திய பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
தாவணகரேவில் உள்ள ஒரு வங்கியில் மேலாளராக இருப்பவர் தேவய்யா. இவரிடம் ஒரு பெண் ரூ. 2 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பித்தார். கடன் கோரிக்கையைப் பரிசீலித்த தேவய்யா, அந்தப் பெண்ணிடம், தன்னுடன் அட்ஜஸ்ட் செய்து போனால் கடன் தொகையை உடனடியாக தருவதாக கூறியுள்ளார் தேவய்யா.
மீ டூ போட்டு ஊரே அல்லோகல்லப்படும் இந்த நேரத்திலுமா இப்படி என்று அதிர்ந்து போன அப்பெண் கடனே தேவையில்லை என்று கூறி விட்டுக் கிளம்பினார். வீட்டுக்கு வந்த அவரிடம் அவரது தங்கை என்னாச்சு லோன் கிடைத்ததா என்று கேட்டுள்ளார். அப்போது நடந்ததைக் கூறியுள்ளார் அப்பெண். அதைக் கேட்டு கொதிப்படைந்த தங்கை தனது உறவினர் ஒருவரை அழைத்துக் கொண்டு வங்கிக்கு விரைந்தார்.
உள்ளே இருந்த தேவய்யாவை பிடித்து தரதரவென வெளியே இழுத்து வந்த அவர் கையில் கிடைத்த ஒரு கட்டையை எடுத்து சரமாரியாக வெளுத்தார். அடி தாங்க முடியாமல் அலறினார் தேவய்யா. இந்த வீடியோவை தற்போது அப்பெண் சமூக வலைதளங்களில் போட்டு வைரலாக்கி விட்டார். அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
#WATCH Woman in Karnataka's Davanagere thrashes a bank manager for allegedly asking sexual favours to approve her loan (15 October) pic.twitter.com/IiiKbiEgZ9
— ANI (@ANI) October 16, 2018
தேவய்யாக்களே.. இதை தேவையா.. திருந்துங்கய்யா!