ஓடும் காரில் பெண் பயணியை பார்த்தபடியே சுய இன்பம் செய்த கால் டாக்சி டிரைவர்!
டெல்லி: தனியார் கார் நிறுவன டிரைவர் வண்டி ஓட்டும்போதே, ஒருமாதிரியாக சிரித்தபடி, சுய இன்பம் அனுபவித்தார் என்று காரில் பயணித்த இளம் பெண் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு டெல்லியின் சகீத் என்ற பகுதியை சேர்ந்த இளம் பெண் சம்பவத்தன்று, பரிதாபாத்துக்கு செல்ல டாக்சி புக் செய்துள்ளார். 'டாக்சி பார் சுயர்' நிறுவனத்தில் இருந்து டாக்சி வந்துள்ளது.
இந்நிலையில், பயணத்தின்போது பயங்கர அனுபவத்தை சந்தித்துள்ளார் அப்பெண். இதுகுறித்து இளம் பெண் கூறியதாவது: காரை தேவேந்திரகுமார் என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார். நான் சென்று சேர வேண்டிய பகுதிக்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக இருந்து அவரது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது.
வண்டியை வேகமாக ஓட்டினார், பொறுமை இழந்தவராக காணப்பட்டார், தனது வாய்க்குள் ஏதோ முனகினார். நான் எப்போதும் காரில் பயணிக்கும்போது செல்போனில் பேசிக்கொண்டிருப்பது வழக்கம். அதேபோல பேசிக்கொண்டிருந்தேன். ஆனால், டிரைவர் வண்டியை ஓட்டியபடியே சுய இன்பம் செய்வதை அப்போதுதான் பார்த்தேன். நான் பார்ப்பதை கவனித்ததும், என்னை பார்த்து ஒரு மாதிரியாக சிரித்தார். வண்டியின் கட்டுப்பாடு அவரிடம் இல்லை.
நான் ஜன்னல் கண்ணாடிகளை கீழே இறக்கிவிட்டு வெளியே பார்த்தபடி பல்லை கடித்துக்கொண்டே பயணித்தேன். காரை விட்டு இறங்கியதும், கஸ்டமர் கேருக்கு புகார் அளித்தேன். இவ்வாறு அந்த பெண் கூறியுள்ளார். இதுகுறித்து சம்மந்தப்பட்ட டாக்சி நிறுவனத்திடம் கேட்டபோது, இந்த டிரைவர் மீது இதற்கு முன்பாக புகார் வந்ததில்லை. இப்போது, வந்த புகாரை தொடர்ந்து அவர் பெயர் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளது.