நிச்சயிக்கப்பட்ட ராணுவ வீரர் மாப்பிள்ளை வீரமரணம்: மனமுடைந்து இளம்பெண் தற்கொலை
போபால்: தனக்கு நிச்சயிக்கப்பட்ட ராணுவ வீரர் மாப்பிள்ளை காஷ்மீரில் வீர மரணம் அடைந்ததை அடுத்து இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் தீவாஸ் மாவட்டத்தில் உள்ள பார்கேடா கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி தாக்கட்(22). அவருக்கும் காஷ்மீரில் பணியாற்றி வந்த ராணுவ வீரர் நீலேஷுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 5ம் தேதி நீலேஷ் குண்டடிபட்டு உயிர் இழந்தார். இதையடுத்து நீலேஷின் உடல் அவரின் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நீலேஷ் இறந்த அதிர்ச்சியில் இருந்த ஜோதி நேற்று தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீலேஷ் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்தார். பிளஸ் 2 முடித்தவுடன் ராணுவத்தில் சேர்ந்த அவர் முதலில் பஞ்சாபில் பணியாற்றினார்.
அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கடைசியாக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.