பிரசவத்தின் போது மனைவி மரணம்- டாக்டரை துப்பாக்கியால் சுட்ட கணவர்!!
மீரட்: உத்தரப்பிரதேசத்தில் பிரசவத்தின் போது மனைவி இறந்தால் ஆத்திரம் அடைந்த கணவர் பிரசவம் பார்த்த பெண் டாக்டரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பாசல்பூர் பகுதியை சேர்ந்தவர் பாபுதீன். இவரது கர்ப்பிணி மனைவி அங்குள்ள மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.
ஆனால் மனைவி பிரசவத்தின் போது இறந்துவிட்டார். இதனையடுத்து பாபுதீன் கடும் கோபம் அடைந்துள்ளார். இறந்த பெண்ணின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது. இதனிடையே டாக்டரின் கவனக்குறைவு காரணமாகதான் தனது மனைவி இறந்துவிட்டார் என்று கூறி பாபுதீன் மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த டாக்டர் முனேஷ் தோமரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.
உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள் முனேஷை பிடித்து அடித்து உதைத்தனர். இதில் அவரும் படுகாயம் அடைந்தார். சுடப்பட்ட டாக்டருக்கு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பாபுதீன் மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.