For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூரில் கணவன் கண் எதிரில் பெண் கூட்டு பலாத்காரம்.. ஆட்டோ டிரைவர் உட்பட 3 பேர் கைது

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    பெங்களூரில் கணவன் கண் எதிரில் பெண் கூட்டு பலாத்காரம்..வீடியோ

    பெங்களூர்: 26 வயது பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 23 வயது ஆட்டோ டிரைவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.

    பெங்களூர், மாதநாயக்கனஹள்ளி காவல் சரகத்திலுள்ள சித்தனஹொசஹள்ளி பகுதியில் வசித்து வருபவர், சித்தண்ணா மனைவி ரத்னா (26, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன).

    ரத்னா, கார்மெண்ட்ஸ் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    கூட்டு பலாத்காரம்

    கூட்டு பலாத்காரம்

    சம்பவத்தன்று, நான்கு பேர் கொண்ட கும்பல், இவரது வீட்டுக்குள் புகுந்து கணவன் சித்தண்ணாவை அடித்து போட்டு, கத்தியை காட்டி மிரட்டி ரத்னாவை கூட்டாக பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பலாத்காரம் செய்தபோது நால்வரும் குடி போதையில் இருந்துள்ளனர்.

    போலீசில் புகார்

    போலீசில் புகார்

    சித்தண்ணாவை வீட்டை விட்டு சிறிது தூரத்திற்கு கொண்டு சென்று அடித்து போட்டுவிட்டு அந்த கும்பல் தப்பிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. வீடு திரும்பிய சித்தண்ணா இதுகுறித்து, மாதநாயக்கனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    ஆட்டோ டிரைவர், கூட்டாளிகள் கைது

    ஆட்டோ டிரைவர், கூட்டாளிகள் கைது

    ரத்னா அளித்த புகாரில், 23 வயதாகவும் ஆட்டோ டிரைவர் வெங்கடேஷ் என்பவரும், அவரது நண்பரும் ராஜகோபால் நகர் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பிடித்த ராகவேந்திரா (32), புனித் (22) மற்றும் விஜய்குமார் ஆகியோர்தான் தன்னை மாறிமாறி கூட்டாக பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டுள்ளது.

    தொடர்ந்து சீண்டல்

    தொடர்ந்து சீண்டல்

    இதில் விஜய்குமார் மட்டும் தலைமறைவாகிவிட்ட நிலையில் மற்ற மூவரையும் காவல் துறை கைது செய்துள்ளது. விசாரணையில், வெங்கடேஷ் ரொம்ப நாளாகவே ரத்னா கார்மெண்ட்ஸ் நிறுவனத்திற்கு வேலை செய்ய செல்லும்போதெல்லாம் அவரை ஃபாலோ செய்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும், அதற்கு ரத்னா மறுத்து வந்ததால் வீடு புகுந்து கூட்டாக பலாத்காரம் செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

    தீவிர விசாரணை

    தீவிர விசாரணை

    அதேநேரம், கைதானவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், பலாத்காரம் செய்தபோது, ஆட்டோ டிரைவரான சித்தண்ணா வீட்டில் இல்லை என கூறியுள்ளனர். அருகேயுள்ள பாரில் மது குடித்துவிட்டு ரத்னா வீட்டுக்குள் புகுந்து அவரை பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    English summary
    Autorickshaw driver and his two associates including a rowdy sheeter have been arrested for the alleged gang rape of a woman in Bengaluru.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X