ராகுல் கன்னத்தை பிடித்து முத்தம் தந்த பெண்.. தாடையையும் கிள்ளி கொஞ்சினார்.. பிரச்சாரத்தில் கலகலப்பு
மேடையிலேயே ராகுல்காந்திக்கு காங்கிரஸ் பெண் முத்தம் தந்தார்,
காந்திநகர்: பிரச்சார மேடையில் வைத்தே பெண் ஒருவர் ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால், அனைத்து கட்சி தலைவர்களும் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பாக அதன் தலைவர் ராகுல் காந்தியும் இந்த பிரச்சாரத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டம் லால்டுங்ரி என்ற பகுதியில் இன்று ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ராகுல் காந்தி
அப்போது, மேடையில் ஏராளமான காங்கிரஸ் பிரமுகர்கள் உட்கார்ந்திருந்தனர். மக்களிடையே உரையாற்றிவிட்டு, ராகுல் காந்தியும் மேடையில் இருந்த தன் இருக்கையில் அமர்ந்திருந்தார்.
கன்னத்தில் முத்தம்
சிறிது நேரத்தில் ராகுல்காந்திக்கு மகளிரணி நிர்வாகிகள் சிலர் மாலை அணிவித்தனர். அந்த நேரம் பார்த்து அதிலிருந்த ஒரு பெண் ராகுல் காந்தியின் கன்னத்தில் முத்தமிட்டார். பிறகு அவரது கன்னத்தையும், தாடையையும் கிள்ளி கொஞ்சி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
புன்முறுவல்
இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத ராகுல், என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு நிமிஷம் திகைத்து நின்றார். அதனை தொடர்ந்து புன்முறுவலுடனே உட்கார்ந்திருந்தார்.
படுவைரல்
மேடைக்கு வந்த அந்த வயதான பெண் ராகுலுக்கு முத்தமிட்டு தனது பாசத்தை வெளிப்படுத்திய இந்த காட்சி இணையத்தில் படு வைரலாகி வருகிறது.