கருப்பு கலர் பேண்ட்.. பிங்க் கலர் ஷர்ட்.. டிக்டாக்கில் ஆட்டம்.. பெண் போலீஸ் அதிரடி சஸ்பெண்ட்
Recommended Video
காந்திநகர்: குஜராத் மாநிலம் மெகசானா மாவட்டத்தில் உள்ள லங்னாஜ் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றுபவர் அர்பிதா சவுத்ரி. 2016ல்தான் பணிக்கு சேர்ந்தார். சதா சர்வகாலம் டிக்-டாக் செயலியில் பாட்டுக்கு டான்ஸ் ஆடுவது, நடிப்பதே இவர் வேலை.
அதுகூட பரவாயில்லை சொந்த விஷயம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன் லாக் அப் முன்னால் நின்று கொண்டு, மப்டியில், அதாங்க, கருப்பு பேண்ட் மற்றும் இளஞ்சிவப்பு வண்ண சட்டையில், ஹிந்தி பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடினார்.
சும்மா சொல்லக் கூடாது. அர்பிதா சவுத்ரி நன்றாகத்தான் டான்ஸ் ஆடினார். ஆனால், சம்பவம் நடந்தது காவல்நிலையத்தில் வைத்தாயிற்றே. எனவே, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
Lady police constable in Mahesana district of North Gujarat faces disciplinary action after her TikTok video shot in police station goes viral pic.twitter.com/7NWXpXCh8r
— DeshGujarat (@DeshGujarat) July 24, 2019
காவல் நிலையத்தில், கண்ணியமாக இருக்க வேண்டிய பெண் போலீசே இப்படி செயல்படலாமா? காவல் நிலைய மரியாதை என்னவாகுவது என்று, பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து சவுத்ரியை சஸ்பெண்ட் செய்ய துணை காவல்துறை கண்காணிப்பாளர் மஞ்சிதா உத்தரவிட்டார். துறை நீதியான விசாரணைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மஞ்சிதா அளித்த பேட்டியில், "பணி நேரத்தில் சீருடை இல்லாமல் இருந்துள்ளார். அதோடு, காவல் நிலையத்திற்குள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்லார். காவல்துறையில் உள்ளவர்கள் ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும். எனவேதான், அர்பிதா சவுத்ரி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என கூறியுள்ளார்.