பேசிக்கொண்டு இருக்கும் போதே தீ வைத்தார்கள்.. உ.பியில் கந்து வட்டி கொடுமையில் கொளுத்தப்பட்ட பெண்
20,000 கடன் தொகையை கொடுக்காததால் உத்தர பிரதேசத்தில் பெண் ஒருவர் தீ வைத்து கொளுத்தப்பட்டு இருக்கிறார்.
லக்னோ: 20,000 கடன் தொகையை கொடுக்காததால் உத்தர பிரதேசத்தில் பெண் ஒருவர் தீ வைத்து கொளுத்தப்பட்டு இருக்கிறார்.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அந்த பெண் அங்கு இருக்கும் எல்லோருக்கும் முன்னிலையில் கொளுத்தப்பட்டு இருக்கிறார்.
ரேஷ்மி என்று அந்த பெண் தற்போது உயிர் பிழைத்து இருக்கிறார். மிகவும் மோசமான நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
எவ்வளவு கடன்
ரேஷ்மி தலித் பெண். அதே பகுதியை சேர்ந்த பெரிய கந்துவட்டி குழுவிடம் இவர் கடன் வாங்கி இருக்கிறார். 3 மாதங்களுக்கு முன்பு குடும்ப விழா ஒன்றிற்காக 20 ஆயிரம் வாங்கி இருக்கிறார்.
வட்டி கொடுத்தார்
இவர் கடந்த மூன்று மாதமாக சரியாக வட்டி கொடுத்து வந்துள்ளார். இந்த மாதமும் வட்டி கேட்ட போது கொடுத்துள்ளார். ஆனால் அந்த கந்து வட்டி குழுவின் ஆட்கள் அசலை கேட்டு அந்த பெண்ணை அடித்து இருக்கிறார்கள்.
தீ வைத்தார்கள்
இந்த நிலையில் அந்த பெண்ணை தெரு வரை தரதரவென இழுத்து வந்துள்ளார்கள். அதேபோது எல்லோரும் பார்க்கும் வகையில் அந்த பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர். அந்த எரியும் வரை காத்திருந்துவிட்டு அங்கிருந்து தப்பித்து இருக்கிறார்கள்.
மோசம்
தற்போது இவர் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவர் உடலில் 60 சதவிகிதம் காயங்கள் இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது. பேசிக்கொண்டு இருக்கும் போது தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்கள் என்று அந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.