தோழி ஆடை மாற்றுவதை வீடியோ எடுத்து பாய்ஃபிரண்டுக்கு அனுப்பிய 'காமப் பெண்'!
பெங்களூர்: விடுதியில் உடன் தங்கியிருந்த பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆடை மாற்றும் படங்கள், வீடியோக்களை செல்போனில் பிடித்து, ஆண் நண்பருக்கு அனுப்பிய விவாகரத்தான பெண்மணி கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றவும், கல்வி பயிலவும், பல மாநிலங்களில் இருந்தும் ஆண்கள், பெண்கள் வருகிறார்கள். அவர்கள் தங்குவதற்கென்று, பி.ஜி எனப்படும் பேயிங் கெஸ்ட் வீடுகள் ஏகப்பட்டது முளைத்துள்ளன.
பி.ஜிக்களுக்கு வரவேற்பு
நாலைந்து பேர் ஒன்றாக தங்கி வாடகையை பகிர்ந்து கொடுப்பதால், தங்கியுள்ளோருக்கும் வாடகை சுமை தெரியாது, ஓனருக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பதால் பி.ஜிக்களுக்கு வரவேற்பு அதிகம். ஆனால், பிரைவசி பாதிக்கப்படும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன என்பதற்கு இந்திராநகர் பகுதியில் நடந்துள்ள இச்சம்பவம் ஒரு உதாரணம்.
சாப்ட்வேர் இன்ஜினியர்
பக்கத்து மாநிலத்தை சேர்ந்த காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 23 வயது பெண், பெங்களூரிலுள்ள பிரபல நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். அவர் இந்திராநகர் 2வது கிராசிலுள்ள விநாயகா ஹோம்ஸ் என்ற பி.ஜி. ஹாஸ்டலில் தங்கியுள்ளார்.
நெருக்கம்
இந்நிலையில் நம்ரதா என்ற தனியார் நிறுவன பெண் ஊழியரும், காவ்யாவின் அறையில் கடந்த 2 மாதங்கள் முன்பிலிருந்து தங்க ஆரம்பித்தார். ஆரம்பம் முதலே, காவ்யாவுடன் மிகவும் நெருக்கம் காட்டியுள்ளார் நம்ரதா. அவரை கட்டி அணைப்பது, முத்தம் கொடுப்பது போன்ற செயல்களிலும் நம்ரதா ஈடுபட்டுள்ளார். நட்பின் அடிப்படையில் இவ்வாறு செய்வதாக காவ்யா கண்டுகொள்ளவில்லை.
குளிக்கும் போட்டோக்கள்
இதே நட்பின் அடிப்படையில், காவ்யா உடை மாற்றும்போது, குளிக்கும்போதெல்லாம், ஜாலியாக போட்டோ எடுக்கிறேன் என்ற பெயரில் போட்டோ, வீடியோக்களை தனது செல்போனில் எடுத்துள்ளார் நம்ரதா. காவ்யா தூங்கும்போது, ஆடை கலைந்த நிலையில் இருக்கும்போதும், போட்டோக்களை பிடித்துள்ளார்.
போட்டோக்கள் வெளியாகின
இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைத்தளம் ஒன்றில், தனது அரைகுறை ஆடை, போட்டோக்கள் வெளியிடப்பட்ட விஷயம் காவ்யாவின் காதுக்கு எட்டியுள்ளது. போட்டோக்களை பார்த்தபோதுதான், அது நம்ரதா எடுத்த போட்டோக்கள் என்று தெரியவந்தது. உடனடியாக காவ்யா, இந்திராநகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நம்ரதா மீது இந்திய தண்டனை சட்டம் 354, தகவல் தொழில்நுட்ப சட்டம் போன்றவற்றின்கீழ், பெண்ணின் மாண்பை குலைத்ததற்காக வழக்குப்பதிவு செய்தனர்.
பாய்ஃபிரெண்ட்
நம்ரதாவிடம் விசாரணை நடத்தியபோதுதான், திடுக்கிடும் உண்மை ஒன்று வெளியானது. விவாகரத்தான நம்ரதா ஜெயதேவ் என்ற வேறு ஆணுடன் நட்பை வளர்த்துக்கொண்டிருப்பதும், காவ்யாவின் போட்டோக்களை அந்த ஆணுக்கு அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. காவ்யாவின் உடல் பாகங்கள் குறித்து, ஜெயதேவ் ஆபாசமாக கமெண்ட் அடிப்பதும், அதை கேட்டு நம்ரதா கிளர்ச்சி அடைவதும் வழக்கம் என்று தெரியவந்துள்ளது.