For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்போலியில் வீடு தேடி சென்ற 28 வயது பெண் 8 பேரால் பலாத்காரம்

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: மும்பை அருகே உள்ள அம்போலியில் வீடு தேடி சென்ற 28 வயது பெண் கட்டிப்போட்டு 8 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அம்போலியை சேர்ந்த தம்பதி வீடு தேடி அலைந்துள்ளனர். அவர்களுக்கு பெண் புரோக்கர் ஒருவர் வீடு தேட உதவியுள்ளார். திங்கட்கிழமை வீடு தேடியதில் நேரமானதால் அந்த தம்பதி அம்போலி பகுதியில் உள்ள பெண் புரோக்கரின் வீட்டிலேயே தங்கியுள்ளனர்.

Woman tied up, gang-raped while house-hunting in Amboli

இதை கவனித்த அப்பகுதியை சேர்ந்த 8 வாலிபர்கள் அங்கு வந்து கணவரை விரட்டிவிட்டு 28 வயதுள்ள மனைவியை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் காயம் அடைந்த அந்த பெண் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 7 பேரை கைது செய்து செவ்வாய்க்கிழமை மதியம் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். 8வது நபரை தேடி வருகிறார்கள்.

7 பேரையும் வரும் 4ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். கணவனுடன் இருந்த பெண்ணை 8 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது மும்பை மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

English summary
A 28-year-old woman was allegedly tied up and gang-raped by eight persons at Amboli late on Monday night, the city police said on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X