For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயற்சி.. பரிதாபமாக உயிர்விட்ட டாக்டர் ரம்யா கிருஷ்ணா

Google Oneindia Tamil News

பனாஜி: கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற போது கடல் அலைகளில் சிக்கி ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் உயிரிழந்தார்.

ஆந்திரா மாநிலம் ஜக்கையா பேட்டையைச் சேர்ந்தவ இளம் பெண் மருத்துவர் ரம்யா கிருஷ்ணா, இவர் கோவாவில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.

women doctor died for sea wave after her take selfie goa beach

நேற்று மாலை கோவாவில் கடற்கரைக்கு சென்றார். கடலை பின்புலமாகக் கொண்டு அவர் தமது செல்போனில் செல்பி எடுக்க முயற்சி செய்தார்.

அப்போது திடீரென எழுந்த வந்த ராட்சத அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனை பார்த்த மீனவர்கள் உடனே உள்ளே குதித்து காப்பாற்ற போராடினார்கள். காவல்துறையினரும் மருத்துவரை மீட்க முயற்சித்தனர். ஆனால் அவரை பிணமாகவே மீட்க முடிந்தது. இதையடுத்து அவரது சொந்த ஊரான ஆந்திர மாநிலம் ஜக்கையன் பேட்டைக்கு இன்று அவரது உடல் கொண்டுவரப்பட்டது.

செல்பி மோகத்தால் தங்கள் ஊர் பெண் மருத்துவர் உயிரிரை விட்டதை எண்ணி அந்த ஊர் மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர்.

English summary
andhra pradesh young women doctor died for sea wave after her take selfie goa beach
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X