ஆந்திரா வங்கி முன்னாள் இயக்குநருக்கு ஜாமீன் வழங்க முடியாது.. டெல்லி கோர்ட் அதிரடி
ஆந்திரா வங்கி முன்னாள் இயக்குநர் அனுப் பிரகாஷுக்கு ஜாமீன் வழங்க டெல்லி கோர்ட் மறுப்பு தெரிவித்து இருக்கிறது.
டெல்லி: ஆந்திரா வங்கி முன்னாள் இயக்குநர் அனுப் பிரகாஷுக்கு ஜாமீன் வழங்க டெல்லி கோர்ட் மறுப்பு தெரிவித்து இருக்கிறது.
குஜராத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஆந்திரா வங்கியில் ஐந்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அந்த நிறுவனம் இந்த கடனுக்கான வட்டி, அசல் எதையும் கடனை செலுத்தவில்லை.
அந்த நிறுவனம் வங்கிக்கடன் பெற உதவி செய்து ஏமாற்றிய வழக்கில் ஆந்திரா வங்கி முன்னாள் இயக்குநர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது.
லோன் வாங்க உடந்தையாக ஆந்திரா வங்கி முன்னாள் இயக்குனர் அனுப் பிரகாஷ் கார்க் செயல்பட்டது அம்பலம் ஆகி இருந்தது. இதனை அடிப்படையாக கொண்டு அனுப் பிரகாஷ் கார்க் மற்றும் 7 பேர் மீது ரூ.5,383 கோடி பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் அனுப் முறையீடு செய்து இருந்தார். ஆனால் ஜாமீன் வழங்க வேண்டிய போதிய காரணம் இல்லை என்று நீதிமன்றம் கூறி அவரது ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளனர்.
மேலும் மீதம் இருக்கும் 7 நிறுவன அதிபர்களுக்கும் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.