குரங்குத் தொல்லையா.. தப்பிக்க ஆதித்யநாத் சொல்லும் ஐடியாவை கேளுங்க!
குரங்கு தொல்லைக்கு யோகி புது ஐடியா தந்துள்ளார்.
உ.பி.: முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குரங்கு தொல்லையிலிருந்து விடுபட ஒரு புது ஐடியா தந்துள்ளார். அந்த ஐடியா கூட ஒரு கதையும் சொல்லி அசத்தியுள்ளார்.
யோகி அதித்யநாத் மதுராவுக்கு சென்றிருந்தார். அங்கு பிருந்தாவனை நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் பார்த்து ரசித்தார். அப்போது மதுராவில் வசிப்பவர்கள் முதல்வரிடம் ஒரு வித்தியாசமான புகாரை கொண்டு வந்தனர். அதாவது, "என்ன செய்தாலும் இந்த குரங்குகள் தொல்லையில் இருந்து விடுபடவே முடியல. குரங்குகள் எல்லாம் எங்களை பாடாய் படுத்துது " என்றனர்.
இதைக் கேட்ட யோகி அவர்களுக்கு ஒரு ஐடியா தந்துள்ளார். "ஹனுமனை தினமும் கும்மிட்டு, அவர் மீதான மந்திரத்தை ஓதுங்கள். குரங்குகள் என்னைக்குமே உங்களுக்கு தொல்லை தராது பாருங்கள். இப்படித்தான், நான் மடாதிபதியாக இருக்கும் கோரக்நாத் கோயிலிலும் குரங்குகள் நிறைய வரும். எப்பவுமே அந்த குரங்குகள் என் மடியிலதான் உட்கார்ந்து கொள்ளும். நான் என்ன கொடுத்தாலும் அதை சாப்பிட்டு போய்டும்" என்றார்.
Mai yahan aaya to mujhse kaha gaya ki yahan par bandar bade pareshan kar rahe hain. Maine kaha 'Bajrang Bali' ki aarti karna shuru karo, 'hanuman chalisa' ka path karo, bandar kabhi nuksaan nahin pahuchayega: UP CM Yogi Adityanath in Mathura (31.08.18) pic.twitter.com/NRDgGRWmvg
— ANI UP (@ANINewsUP) September 1, 2018
முதல்வர் ஐடியா கொடுத்ததெல்லாம் சரி... ஏற்கனவே இந்த மதுராவில் குரங்குகளால் 50-க்கும் மேற்பட்டோர் விபத்துகளை சந்தித்துள்ளனர். அவர்கள் அனைவருமே பக்தர்கள்தான். ஆனால், அதை பற்றி முதல்வர் எதுவுமே சொல்லாமல் போய்விட்டாரே?!