For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

4 பேர் மரணம்.. 50க்கும் அதிகமானோர் படுகாயம்.. வடமாநிலங்களை முடக்கிய தலித் போராட்டம்

இந்தியாவின் வட மாநிலங்கள் முழுக்க தலித் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் தற்போது பெரிய அளவில் கலவரமாக மாறியுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    தீவிரமடையும் தலித் மக்களின் போராட்டத்தால் வட மாநிலங்களில் பதற்றம்

    டெல்லி: இந்தியாவின் வட மாநிலங்கள் முழுக்க தலித் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் தற்போது பெரிய அளவில் கலவரமாக மாறியுள்ளது.

    கடந்த மார்ச் 20ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. அதன்படி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி இனி அரசு ஊழியர்களை கைது செய்ய முடியாது என்று கூறியது.

    இது அந்த சட்டத்தையே கேள்விக்குறியாக்கியது. இதற்கு எதிராக இந்தியா முழுக்க தலித் மக்கள் போராடி வருகிறார்கள். இது அங்கு இயல்பு வாழ்க்கையை பாதித்து இருக்கிறது.

    மோசமான கலவரம்

    மோசமான கலவரம்

    இந்த போராட்டம் மிகவும் மோசமான நிலையை அடைந்து இருக்கிறது. பல இடங்களில் மக்கள் கள்ள துப்பாக்கிகளை வைத்து சுட்டுக் கொண்டு இருக்கிறார்கள். கடைகள் , பேருந்துகள் கொளுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் போலீஸ் சில அப்பாவி மக்களையும் தேவையில்லாமல் தாக்கி இருக்கிறது.

    துண்டிப்பு

    துண்டிப்பு

    மேலும் மத்திய பிரதேசம் முழுக்க இணையம் முடக்கப்பட்டு உள்ளது. 4 மாநிலங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. டெல்லி முழுக்க இந்த போராட்டம் காரணமாக ஸ்தம்பித்து இருக்கிறது.

    எத்தனை மரணம்

    எத்தனை மரணம்

    இன்று மட்டும் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த போராட்டம் காரணமாக 4 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். 50க்கும் அதிகமான நபர்கள் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் டெல்லி, உத்தர பிரதேசத்தில் நிறைய பேர் காயம் அடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    விசாரிக்க முடியாது

    விசாரிக்க முடியாது

    ஆனாலும் இவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியிலும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உச்ச நீதிமன்றம் செய்த மாற்றத்தை திரும்ப பெற கோரி மத்திய அரசு செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. போராட்டம் நடக்கிறது என்பதற்காக அவசர வழக்காக விசாரிக்க முடியாது, நாளை இல்லை நாளை மறுநாள் இது பற்றி விசாரிப்போம் என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

    English summary
    Dalits are doing protest in North India against Supreme Court changes in automatic arrests and registration of criminal cases under the SC/ST Act. Now due to the protest NDA government today filed a petition seeking review of the Supreme Court order.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X