மாயமான விமானப் படை விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு!
இடாநகர்: மாயமான விமானப் படை விமானத்தின் உடைந்த பாகங்கள் அருணாச்சலபிரதேசத்தில் மலை கிராமம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் மாநிலம் ஜோர்காட் விமான படை தளத்தில் இருந்து ஜூன் 3-ந் தேதியன்று 13 பேருடன் ஏ.என்.32 ரக சரக்கு விமானம் அருணாச்சல பிரதேசத்துக்கு சென்றது. ஆனால் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
இதையடுத்து விமானத்துக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து ஒரு வார காலமாக தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நிலையில் அருணாச்சல பிரதேசத்தின் லிபோ பகுதியின் வடக்கே உடைந்த விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட எம்.17 ரக ஹெலிகாப்டரில் சென்ற விமானப் படை வீரர்கள் இந்த பாகங்களை கண்டுபிடித்துள்ளனர். இது மாயமான ஏ.என்.32 ரகத்தின் பாகங்கள்தானா என ஆராயப்பட்டு வருகிறது.
Indian Air Force: The wreckage of the missing AN-32 was spotted today 16 Kms North of Lipo, North East of Tato, at an approximate elevation of 12000 ft, by the IAF Mi-17 Helicopter undertaking search in the expanded search zone pic.twitter.com/oYzPheEYIl
— ANI (@ANI) June 11, 2019
மேலும் விமானத்தில் பயணித்த 13 பேர் கதி குறித்தும் அப்பகுதியில் தேடுதல் முடுக்கிவிடப்பட்டுள்ளது.