பாஜகவில் இருந்து விலகினார் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா... காரணம் என்ன?
பாஜகவிலிருந்து இருந்து முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா விலகினார்.
பாட்னா: பாஜகவிலிருந்து முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா விலகுவதாக அறிவித்தார்.
பாஜகவை சேர்ந்தவர் யஷ்வந்த் சின்ஹா. மூத்த தலைவர்களுக்கு கட்சியில் மதிப்பில்லை என்று கூறி இன்று விலகுவதாக அறிவித்துள்ளார். முன்னாள் நிதியமைச்சராக இருந்த சின்ஹா, பிரதமர் பதவிக்கு மோடி வந்ததை எதிர்த்தவர்.
வேறு எந்த அரசியல் கட்சியிலும் சேரமாட்டேன் என்றும் பாஜகவில் எல்லா தொடர்புகளையும் முறித்து கொள்வதாகவும் அவர் பாட்னாவில் தெரிவித்திருந்தார்.
மேலும் அரசியல் வாழ்க்கையிலிருந்து துறவறம் மேற்கொள்வதாகவும் அவர் அறிவித்தார். மோடி ஆட்சியில் பலதுறைகளில் நாடு பின்தங்கிவிட்டதாக கருத்து கூறியவர் யஷ்வந்த் சின்ஹா.
Today I am taking 'sanyas' from any kind of party politics, today I am ending all ties with the BJP: Former Finance Minister Yashwant Sinha in Patna. pic.twitter.com/cOvInznyza
— ANI (@ANI) April 21, 2018