Breaking News Live: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவர் திடீர் மாயம்!
கர்நாடக முதல்வராக பதவியேற்க ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டார் எடியூரப்பா.
பெங்களூரு: காங்கிரசின் பிரதாப் கவுடா, ஆனந்த்சிங் ஆகிய 2 எம்எல்ஏக்கள் மாயமாகியுள்ளதால் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த எம்எல்ஏக்களை காங்கிரஸ் தலைவர்களால் போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனிடையே நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தரப்போகிறார்கள் என ஸ்ரீராமலு அறிவித்து பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளார். பாஜக தொண்டர்கள் மத்தியில் பகிரங்கமாக ஸ்ரீராமலு அறிவிப்பு வெளியிட்டார். பாஜக எம்எல்ஏவாகியுள்ள ஸ்ரீராமலு ரெட்டி சகோதரர்களுக்கு உற்ற நண்பன் என்பது கவனிக்கத்தக்கது.
தொண்டர்கள் வாழ்த்து கோஷம் முழங்க முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா. ஆளுநர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். கடவுள் மற்றும் விவசாயிகள் பெயரால் எடியூரப்பா பதவி பிரமாணம் செய்து கொண்டார். அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.
லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த எடியூரப்பா கர்நாடகாவின் 23வது முதல்வர் ஆவார். ஆளுநர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் அவர் பதவியேற்றார்.
அவருடன் கோவிந்த காரஜோலா, ஸ்ரீராமலு, ஈஸ்வரப்பா, ஆர்.அசோக்கும் பதவியேற்கலாம் என கூறப்படுகிறது. முதல்வராக பதவியேற்க பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்ட அவர், வழியில் பெங்களூர் ராதாகிருஷ்ணன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.