For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கவுதமிக்கு சம்பளம் கொடுத்தாச்சா இல்லையா? என்ன சொல்கிறார் கமல்?

கவுதமிக்கு நிலுவையில் இருந்த சம்பள பாக்கியை கொடுத்துவிட்டீர்களா என்ற கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சுற்றுச்சூழல் குறித்து பேசினாலே குற்றமா?.. கமல் கேள்வி-வீடியோ

    டெல்லி: கவுதமிக்கு நிலுவையில் இருந்த சம்பள பாக்கியை கொடுத்துவிட்டீர்களா என்ற கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

    நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார்.

    அதன்பின்னர் தனது கட்சியை முறைப்படி பதிவு செய்வதற்காக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.

    தேர்தல் ஆணையத்தில் கமல்

    தேர்தல் ஆணையத்தில் கமல்

    இந்நிலையில் தேர்தல் ஆணைய அழைப்பை ஏற்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் இன்று டெல்லி சென்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தார்.

    அங்கீகாரம் கிடைக்கும்

    அங்கீகாரம் கிடைக்கும்

    அப்போது கட்சிக்கு அங்கீகாரம் பெறுவது தொடர்பாக மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
    தற்போது கட்சிக்கு அங்கீகாரம் பெறுவது தொடர்பாக மட்டுமே அதிகாரிகளிடம் பேசியிருப்பதாகவும், கூடிய விரைவில் அங்கீகாரம் கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

    பேசினாலே குற்றம்

    பேசினாலே குற்றம்

    மேலும், கட்சியின் சின்னம் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றார். சேலத்தில் அமைய உள்ள பசுமை வழித்திட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன் சுற்றுச்சூழல் குறித்து பேசினாலே குற்றம் என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

    சம்பளம் கொடுத்துவிட்டீர்களா?

    சம்பளம் கொடுத்துவிட்டீர்களா?

    அப்போது சம்பள பாக்கி இருப்பதாக கவுதமி குற்றம்சாட்டியது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், கவுதமியின் சம்பள பாக்கியை கொடுத்துவிட்டீர்களா என கேள்வி எழுப்பினர்.

    கவுதமி கூறவில்லையா?

    கவுதமி கூறவில்லையா?

    அதற்கு பதிலளித்த கமல் கவுதமிக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை கொடுத்துவிட்டேன் என்றார். சம்பளம் கொடுக்காததை கூறிய கவுதமி சம்பளம் கொடுத்ததை உங்களிடம் தெரிவிக்கவில்லையா என்றார்.

    English summary
    Reporters raised question to Kamal that have you settled Gawthami's Salary balance. Kamal said yes we settled it, didnt she tell to you?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X