For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீட்டிற்கு பார்சலில் வருகிறது கங்கை புனித நீர்... தபால்துறை புதிய திட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: கங்கை புனித நீரை தபால்துறையின் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கும் சேவை, விரைவில் தொடங்கப்படும் என மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்துக்கள் புனிதமாக வணங்கும் கங்கை நதி நீரை, மக்கள் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்று வருகின்றனர். இது தொடர்பாக மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில்,

Gangajal

கங்கை நீரை தபால் மூலம் வீட்டுக்கு கொண்டுவர முடியுமா என்பது குறித்து பல்வேறு வேண்டுகோள் எனக்கு வந்துள்ளன. தபால்துறையானது இ - காமர்ஸ் மூலமாக ரிஷிகேஷ், ஹரித்துவார் போன்ற இடங்களில் இருந்து புனிதமான கங்கை நீரை எடுத்து பார்சல் மூலம் மக்களுக்கு வழங்க வேண்டும் என தபால் துறையிடம் தெரிவித்திருக்கிறேன். இது தொடர்பாக நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என தபால் துறையும் தெரிவித்துள்ளது.

சேலைகள், ஆபரணங்கள் போன்றவற்றை போஸ்ட்மேன் வீட்டில் கொண்டு வந்து தரும் நிலையில், கங்கை நீரை மட்டும் ஏன் தரமுடியாது என்று அவர் கூறினார்.

English summary
Union Communication and Information Technology Minister Ravi Shankar Prasad has decided that holy Gangajal will be distributed through the postal service.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X