For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடப்பாவிகளா.. 100 வயசு பாட்டியை போய்.. மேற்கு வங்கத்தில் ஒரு கொடூரம்!

100 வயது பாட்டியை 20 வயது இளைஞர் கற்பழித்துள்ளார்.

Google Oneindia Tamil News

கொல்கத்தா: ஒரு வயசு வித்தியாசம்னு எதுவுமே கிடையாதா என்ன?

மேற்கு வங்கத்தில் நாடியா மாவட்டத்தில் சக்தா அருகே ஒரு கேவலமான சம்பவம் நடைபெற்றுள்ளது. கங்கா பிரசாத்பூர் என்ற கிராமத்தில் ஒரு பாட்டி தனியாக வசித்து வந்தார். அவருக்கு வயது 100.

Young Man raped 100 year Old Woman and arrested in West Bengal

அவிஜித் பிஸ்வாஷ் என்ற 20 வயது இளைஞர் திடீரென அந்த பாட்டி வீட்டிற்குள் நுழைந்துவிட்டார். அறைக்குள் பாட்டி தனியாக இருக்கவும் பலாத்காரம் செய்துள்ளார். அந்த பாட்டியோ சத்தம்போட்டு கூட யாரையும் கூப்பிட திராணியற்று அழுதிருக்கிறார். பாட்டியின் அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் ஓடி வந்திருக்கிறார்கள்.

வருமான வரி சோதனைக்கும் 18 எம்எல்ஏக்கள் தீர்ப்புக்கும் தொடர்பு இருக்குமோ?... பகீர் பின்னணி! வருமான வரி சோதனைக்கும் 18 எம்எல்ஏக்கள் தீர்ப்புக்கும் தொடர்பு இருக்குமோ?... பகீர் பின்னணி!

அவர்களை பார்த்ததும் இந்த இளைஞர், கட்டிலுக்கு கீழே போய் ஒளிந்து கொண்டார். அதன்பிறகு வீட்டிற்குள் தேடி பார்த்த பிறகு, கட்டிலுக்கு கீழே பதுங்கிய இளைஞரை கண்டுபிடித்தார்கள். பிறகு போலீசாரிடம் அந்த இளைஞரை பொதுமக்களே பிடித்தும் கொடுத்தார்கள்.

இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, கலியாணி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பிறகு 2 வாரம் நீதிமன்ற காவலில் வைக்க ஜட்ஜ் உத்தரவு போட்டுள்ளார். பாட்டிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு பின்னர் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

காமம் கண்ணை மறைத்தால் பாட்டி கூட குமரியாக தெரியுமா வெறியர்களுக்கு? என்ன ஜென்மங்களோ?

English summary
Young Man raped 100 year Old Woman and arrested in West Bengal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X