வி.கே.சிங்கின் சர்ச்சை கருத்து.. டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
டெல்லி: ஹரியானா மாநிலத்தில் இரண்டு தலித் சிறுமிகள் எரித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங்கை கண்டித்து டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் வி.கே.சிங்கின் உருவ பொம்மைகளை எரித்தும், முழக்கங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் அங்கு போடப்பட்டிருந்த தடுப்புக்களைத் தாண்டி உள்ளே செல்ல முயன்றனர்.இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, ஹரியானாவில் தலித் சிறுமிகள் இருவர் எரித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வி.கே.சிங், நாய் மீது ஒருவர் கல் எறிந்தால் கூட அதற்கு மத்திய அரசை கேள்வி கேட்பதா?, என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். அவரது இந்த கருத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.