ஜிக்கா வைரஸ்: டெல்லியில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
டெல்லி: ஜிக்கா வைரஸ் குறித்து தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் டெல்லியில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
ஜிக்கா வைரஸ் குறித்த ஆய்வு கூட்டம் டெல்லியில் சுகாதாரத் துறை செயலர் பி.பி.சர்மா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை அதிகாரிகள், விமானம் மற்றும் கப்பல் துறை அதிகாரிகளும், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அதிகாரிகளும், உலக சுகாதார மையத்தைச் சேர்ந்த ஹென்க் பெகிடம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்:
புனேவில் உள்ள தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் சோதனைக்கூடம் தவிர தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, கர்நாடகம், மேற்கு வங்கம், உத்திரப்பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், ஓடிசா மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் புதிதாக 10 சோதனை மையங்கள் இந்த மாத இறுதியில் தொடங்கப்படும்
இதுதவிர ஜிக்கா வைரஸ் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் டெல்லியில் 24 மணி நேர கட்டுப்பாறை திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 011 - 2306 1469, 2306 3205 என்ற எண்களை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.