மிசோரம் மாநிலத்தின் முதல்வராக ஜோரம்தங்கா பதவியேற்பு
Recommended Video
ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தின் முதல்வராக ஜோரம்தங்கா இன்று பதவியேற்றார்.
ராஜஸ்தான், மிசோரம், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலத் தேர்தல்கள் நடந்து முடிந்தன. இந்த தேர்தல்களில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைகிறது.
மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 26 இடங்களில் மிசோ தேசிய முன்னணி வெற்றி பெற்றது. ஜோரம் மக்கள் இயக்கம் 8 இடங்களிலும் காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இதையடுத்து மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவர் ஜோரம்தங்கா இன்று முதல்வராக பதவியேற்று கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
Aizawl: Mizo National Front leader Zoramthanga takes oath as the Chief Minister of Mizoram. pic.twitter.com/nce5oo7ukE
— ANI (@ANI) December 15, 2018
மிசோரம் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். இதற்குதான் தனது முதல் கையெழுத்து என ஜோரம்தங்கா தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.