ஐஎஸ் அமைப்பில் சேர கனடாவில் இருந்து வெளியேற முயன்ற 10 பேர் கைது
ஒட்டாவா: கனடாவில் இருந்து கிளம்பிச் சென்று ஈராக்கில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர முயன்ற 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கனடாவின் மான்ட்ரியல் நகரில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் 10 பேரை போலீசார் கைது செய்து அவர்களின் பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்தனர். அந்த 10 பேரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர ஈராக் கிளம்பிச் செல்கையில் போலீசாரிடம் சிக்கினர்.
போலீசார் அந்த 10 பேரின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களை வரவழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். முன்னதாக கடந்த மார்ச் மாதம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர திட்டமிட்ட சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
அதற்கும் முன்பு 5 சிறுவர்களும், 2 சிறுமிகளும் மான்ட்ரியலில் இருந்து கிளம்பிச் சென்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த சிறுமிகள், வாலிபர்களும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த தீவிரவாத அமைப்பாக ஐஎஸ்ஐஎஸ் உருவெடுத்துள்ளது.