டாய்லெட் சீட்டில் அமர்ந்த தாய்லாந்துக்காரரின் மர்ம உறுப்பை கடித்துக் குதறிய மலைப்பாம்பு
பாங்காக்: தாய்லாந்தில் ஒருவர் கழிவறைக்கு சென்றபோது 10 அடி நீள மலைப்பாம்பு அவரின் மர்ம உறுப்பை கடித்துக் குதறியது.
தாய்லாந்தை சேர்ந்தவர் அத்தபோர்ன் பூன்மக்சுவாய்(38). அவர் கடந்த 25ம் தேதி காலைக்கடனை கழிக்க கழிவறைக்கு சென்றுள்ளார். வெஸ்ட்ர்ன் டாய்லெட் சீட்டில் அமர்ந்த அவரின் மர்ம உறுப்பை 10 அடி நீள மலைப்பாம்பு கடித்தது.
வலி தாங்க முடியாமல் அவர் அலற அவரின் மனைவி, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் எவ்வளவோ முயன்றும் பாம்பு அவரின் அந்த இடத்தை விடவில்லை. இதையடுத்து பாம்பின் கழுத்துப் பகுதியில் கயிறை கட்டி இறுக்கிய பிறகு தான் பாம்பு அவரை விட்டது.
அதற்குள் அவருக்கு அந்த இடத்தில் காயம் ஏற்பட்டு கழிவறை எல்லாம் ரத்தமாகிவிட்டது. டிரெய்ன் பைப் வழியாக வந்த பாம்பு டாய்லெட்டில் இருந்துள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் அவர் தற்போது நலமாக உள்ளார்.